மதுரை, மார்ச் 12- மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான கவிதா (50). இவர், அரசு பள்ளியில் இசை ஆசிரிய ராக பணியாற்றும் டேனியல் ஆறுமுகம் என்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளி யை காதலித்து திருமணம் முடித்தார். இவர்களுக்கு நான்சி என்ற மகள் உள்ளார்.
மாற்றுத்திறனாளி கவிதா தனது கணவர் மற்றும் மகளுடன் மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் அருகேயுள்ள அன்னை சத்யாநகர் பார்வையற்றோர் காலனி பகுதியில் வசித்துவந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 3 ஆண்டு களுக்கு முன்பாக கவிதாவின் கணவர் டேனியல் வீட்டில் தவறி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து கவிதாவின் மகள் நான்சி உசிலம்பட்டி பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். அவர் அதே பள்ளியில் விடு தியில் தங்கிவருவதால் கவிதா மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.
கவிதா அருகில் உள்ளவர்களின் உதவியோடு தனது சொந்த வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் திங்க ளன்று இரவு அருகில் உள்ளவர்களு டன் பேசிக்கொண்டிருந்த கவிதா இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கியுள் ளார். செவ்வாயன்று மதியம் வரை கவிதா வீட்டிற்கு வெளியே வராத நிலை யில் அருகில் உள்ளவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.அப்போது பார்வை யற்ற மாற்றுத்திறனாளி கவிதா கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு சடலமாககிடந்துள்ளார்.
தகவல் அறிந்து வந்த சிலைமான் காவல்துறையினர் நடத்திய முதற் கட்ட விசாரணையில் கவிதா அணிந்தி ருந்த 10 பவுன் மதிப்பிலான செயின், மோதிரம், கம்மல் மற்றும் செல்போன் ஆகியவை திருடப்பட்டது தெரிய வந்துள்ளது.
அன்னை சத்யா நகர் பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை தனிப்படை காவல்துறையினர் ஆய்வுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்..
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாக தந்தையை இழந்து தாயுடன் வசித்து வந்த மாணவி தற்போது தாயை யும் இழந்து தவித்துவருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக கவிதா வின் வீட்டிற்குள் மர்ம நபர்கள் சிலர் வந்து தப்பியோடியது தொடர்பாக கவிதாவின் கணவர் காவல்நிலையத் தில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத் தக்கது.
இந்த கொலைச்சம்பவம் அப்பகுதி யில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.