districts

குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்தவர்களை கண்டறிந்து உடனடியாக கைது செய்திடுக : சிபிஎம்

புதுக்கோட்டை மாவட்டம் குளத் தூர் தாலுகா முட்டுக்காடு ஊராட்சிக்கு உட்பட்டது இறையூர் வேங்கைவயல் கிராமம்.  இது கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்குள் வருகிறது. வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் குடிநீருக்காகப் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மனித மலத்தை கலந்துள்ளனர். கடந்த டிசம்பர் 26 அன்று நடந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களுக்குத் தெரிய வந்தது. இச்சம்பவம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரையின் உடனடியான தலை யீட்டைத் தொடர்ந்து, டிசம்பர் 27 அன்று மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டதைத் தொடர்ந்து உடனடியாக தலையீடுகள் மேற்கொள்ளப் பட்டு, ஒரு சிலரின் மீது வன்கொடுமை தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு, அந்த கிராமத்தில் இரட்டைக் குவளை முறை உள்ளிட்ட தீண்டாமை கொடுமைகளை முடிவுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட நிர்வாகத்தின் இத்தகைய உடனடி யான தலையீட்டிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளும் அதே சமயத்தில், இக்கொடிய சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் இப்போது வரை கைது செய்யப்படாமல் இருப்பதும் வருத்தமளிப்பதாகவே உள்ளது. இந்நிலையில், கடந்த ஜனவரி 2 அன்று ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஜவகர் தலைமையில் புதுக்கோட்டையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றதும், ஜனவரி 13 அன்று  சமூக நீதிக் கண்காணிப்புக்குழு சார்பில்  ஆய்வு மேற்கொள்ளப்பட்டதும் ஆக்கப்பூர்வ மான நடவடிக்கைகளே ஆகும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 11 அன்று சட்டப் பேரவையில் அறிவித்துள்ளபடி,

மேற்படி இழிசெயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்வ தோடு, பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான நடவடிக்கை களையும் மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது. தமிழகம் முழுவதும் பட்டியலின மக்கள் மீது இதுபோன்ற பல வகையான சமூக கொடுமைகள் இழைக்கப்பட்டு வருகின்றன. பல தடுப்பு சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பின்ன ரும் நிலைமையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட வில்லை. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அமல்படுத்துவதிலும் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தவில்லை. எனவே, தமிழக அரசு அனைத்து விதமான சமூக ஒடுக்குமுறை களை களைந்திட தீண்டாமைக் கொடுமை இழைக்கும் சமூக விரோதிகள் மீது உரிய நட வடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.  சென்னையில் ஜனவரி 11 அன்று கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து...