எங்கள் பிறப்பில் இந்தி எந்நாளும் ஒட்டியதில்லை என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட் செய்துள்ளார்.
ஒன்றிய அரசு தொடர்ந்து இந்திக்கு முன்னுரிமை கொடுத்து வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியாவில் இந்தி மொழி பேசாத மாநிலங்கள் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி மொழியை கற்க வேண்டும் என பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமித்ஷாவின் பேச்சுக்கு தமிழகத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சியினர் தமிழகத்தில் எப்போதும் இருமொழி கொள்கைதான் அதில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பதிவில்,
ஒன்றிய அரசின் கவனத்திற்கு, இந்தி இல்லாமலே வாழ்ந்தோம். 1959-இல் சென்னை குழந்தை நல மையம், பிரசவ முன் கவனிப்பு பதிவுக்காக தந்த அட்டையில் நான்கு மொழிகள் உள்ளன.
அதில், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, உருது உள்ளது. இந்தி இல்லை. எங்கள் பிறப்பில் இந்தி எந்நாளும் ஒட்டியதில்லை என தெரிவித்துள்ளார்.