districts

மதுரை முக்கிய செய்திகள்

கரும்பு தோட்டத்தில் தீ 4 ஏக்கர் நாசம் 

தேனி, மார்ச் 23- பெரியகுளம் அருகே ஏற்பட்ட தீ விபத்து கரும்பு தோட்டத்தில் பரவி 8 ஏக்கர் கரும்பு தீக்கிரையானது.  தேவதானப்பட்டி அருகே ஜெய மங்கலம் பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அப்பாஸ். இவர் அப்பகுதி யில் சுமார் 8 ஏக்கரில் கரும்பு விவசாயம் செய்து வருகிறார். தோட்டத்தில் உள்ள வரப்பு முள்வேலியில் தீ வைத்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டி ருந்தனர். அப்போது திடீரென தீ தோட் டத்துக்குள் பரவியது.காதர் ஒலி என்ப வருக்கு சொந்தமான தோட்டத்திலும் தீ பரவியது. இதில் சுமார் 4 ஏக்கர் கரும்பு தோட் டம், நீர் பாசன பைப் ஆகியவை சேதம் அடைந்தன. இது குறித்து ஜெயமங்க லம் காவல்நிலையத்தில் அளித்த புகா ரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்ற னர்.

வங்கிக்குள் புகுந்து மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது

தேனி, மார்ச் 23- தேவாரம் அருகே மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி(33) இவரது மனைவி பிரேமலதா(28). குடும்பப் பிரச் சனை காரணமாக பிரேமலதா மதுரை யில் வசித்து வருகிறார். இந்நிலையில் தான், வாங்கிய சொத்தை தனது பெய ருக்கே மாற்றித் தர வெள்ளைச்சாமி கூறி வந்துள்ளார். இதற்கு பிரேமலதா மறுத்த தால் பிரச்சனை மேலும் அதிகரித்தது. இந்நிலையில் மதுரையில் இருந்து  வந்த பிரேமலதா மேட்டுப்பட்டியில் உள்ள வங்கிக்கு சென்றார். தகவல் தெரிந்த வெள்ளைச்சாமி ,உறவினர்கள் ஜெகதீசன், அமுதா, சுப்புலட்சுமி,சாந்தி ஆகியோருடன் வங்கிக்குச் சென்று பிரே மலதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். அப்போது, தான் கொண்டு வந்தி ருந்த அரிவாளால் பிரேமலதாவை வெள் ளைச்சாமி வெட்டினார். காயமடைந்த பிரேமலதாவுக்கு உத்தமபாளையம் அரசு மருத்துவ மனையில் முதலுதவி சிகிச்சை அளிக் கப்பட்டு பின்பு தேனி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க் கப்பட்டார்.தேவாரம் போலீசார் வழக்குப் பதிவு வெள்ளைச்சாமியை கைது செய்த னர்.

நத்தம் முத்தாலம்மன் கோவில் திருவிழா

நத்தம், மார்ச், 24 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடியில் மந்தை முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. முதல்நாள் இரவு வானவேடிக்கை களுடன் ஊர்வலமாக வந்த அம்மனுக்கு கிழக்கு தெருவை சேர்ந்த பெண்கள் ஊர்வலமாக ஆரத்தி எடுத்து வந்து வழிபட்டனர். தொடர்ந்து மேளதாளம் முழங்க கோவில் முன் உள்ள மந் தைக்கு அம்மன் நகர்வலமாக சென்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். திரு விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.

கஞ்சா கடத்தியவர்  கைது

தேனி, மார்ச் 24- போதைப் பொருள் நுண்ணறி வுப்பிரிவு காவல் ஆய்வாளர் சத்யா,  தலைமைக் காவலர் ராஜா தலைமை யிலான காவல்துறையினர் பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வந்த  வத்தலக்குண்டு தாலுகா மலையப் பன்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் (25) என்பவரிடம் விசாரித்தனர். இதில் 4 கிலோ கஞ்சாவை அவர் கடத்திச் செல்வதுதெரிய வந்தது. இதனை யடுத்து அவரை கைது செய்தனர்.

மின்சாரம் பாய்ந்து லோடு மேன் சாவு

தூத்துக்குடி, மார்ச் 23- தூத்துக்குடி அருகே மின்சாரம் பாய்ந்து லோடு மேன் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகேயுள்ள கே. துரைசாமிபுரம், நடுத் தெருவைச் சேர்ந்தவர் பாலு மகன் ஜான் கென்னடி (40). லோடு மேன். இவர் செவ்வாயன்று வள்ளிநாயகபுரம் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு லாரி யில் இருந்து பொருட்களை இறக்கி கொண்டிருந்தார். அப்போது மேலே சென்ற மின் வயரில் அவரது கைபட்ட தால் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரி ழந்தார். இதுகுறித்து குளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

கல்லூரி மாணவி இறப்பிற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து இழப்பீடு வழங்கிடுக!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தேனி, மார்ச் 23- ஆண்டிபட்டி அருகே கல்லூரி மாணவி , காயங்களுடன் மர்மமான முறையில் இறந்த சம்பவத்திற்கு தாமதமின்றி உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் .பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் ஏ.வி.அண்ணாமலை விடுத் துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ள தாவது: ஆண்டிபட்டி அருகே டி.பொம்மிநாயக் கன்பட்டி கிராமத்தை சேர்ந்த பவுன்ராஜ் என்பவரின் மகள் அனுரத்திகா ஸ்ரீநிதி (20). இவர் தேனியில் உள்ள செளராஷ்ட்டிரா கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் சனிக் கிழமை அதிகாலையில் தோட்டத்திற்கு செல்வ தாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றவர் காயங்களுடன் தூக்கில் தொங்கியபடி பிண மாக மீட்கப்பட்டுள்ளார். தகவலறிந்து கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் டி.வெங்கடேசன், மாவட்ட செய லாளர் ஏ.வி.அண்ணாமலை, ஆண்டிபட்டி ஒன்றியச் செயலாளர் மீனாட்சிசுந்தரம், ஜன நாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சு.வெண்மணி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் இ.தர்மர், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் நாகராஜ், செய லாளர் வேல் பிரகாஷ் உள்ளிட்ட குழு வினர் பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அப்போது அவர்கள் மாணவி இறப்பு குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர். மாணவி தற்கொலை செய்து கொள்ள எந்தவித கார ணமும் இல்லை. வாய்ப்பும் இல்லை. உட லில் தாக்கியதற்கான காயங்கள் இருந்த தாக தெரிவித்தனர். எனவே மாவட்ட காவல்துறையினர் துரிதமாக விசாரணை மேற்கொண்டு கல் லூரி மாணவி அனுரத்திகா ஸ்ரீநிதி மர ணத்திற்கு காரணமானவர்கள் மீது உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப் பீடு வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை தெரிவித் துள்ளார்.

வேலைநிறுத்தத்தை விளக்கி ஆர்ப்பாட்டம் 

தேனி, மார்ச் 23- ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத ,தொழிலா ளர் விரோத கொள்கைகளை கண்டித்து வருகிற 28,29 ஆகிய தேதிகளில் நடைபெறும் வேலை நிறுத்த போராட் டத்தை விளக்கி தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கம்பத்தில் விவசாய தொழிலாளர் சங்க ஏரியாச் செய லாளர் காஜா மைதீன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் சிஐடியு தலைவர் வி.மோகன்,பி.முருகேசன் பி.அய்யப்பன், விவசாயிகள் சங்க நிர்வாகி பெ. அய்யப்பன், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க செயலாளர் எச் ஸ்ரீராமன் வி.தொ.ச ஏரியா தலைவர் எஸ்.பன்னீர் வேல் உள்ளிட்டோர் பேசினர்.  பண்ணைபுரத்தில் விதொச நிர்வாகி எஸ் .சுருளிவேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் ஏரியா செயலாளர் டி.ராஜா, விதொச மாவட்ட நிர்வாகி சி.வேல வன், மாதர் சங்க தலைவர்கள் ,சித்ரா,பி .சாந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போடியில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்திற்கு சிஐ டியு செயலாளர் பி.சந்திரசேகர் தலைமை வகித்தார். விவ சாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன், தாலுகா செயலாளர் எஸ்.கே.பாண்டியன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சி.முனீஸ்வரன், சிபிஎம் தாலுகா செய லாளர் எஸ்.செல்வம், விதொச பொறுப்பாளர் தங்கப் பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆண்டிபட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விதொச மாவட்டத் தலைவர் கே.தயாளன், சிபிஎம் ஒன்றி யச் செயலாளர் மீனாட்சிசுந்தரம், சிஐடியு தலைவர்கள் எஸ்.மாரிமுத்து, மா.குருசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.