திண்டுக்கல், நவ.7- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்தி ரம் பகுதியில் அரசு டாஸ்மாக் மது பானக்கடையில் ஊழியர்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் செய்தியாளர்கள் குறித்து டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் திண்டுக்கல் ஆட்சியரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்க ளில் 19 அரசு மதுபான டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த செய்தி யாளர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் கடை ஊழியர்களை மிரட்டி பணம் வாங்கி உள்ள னர். மேலும் பணம் தர மறுத்தால் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதி விடுவோம் என்று மிரட்டியதாக புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். செய்தியா ளர் யார், அவர் எந்த நாளிதழில் வேலை செய்கிறார் என்ற விவரங்களுடன் பட்டிய லிட்டு மனு கொடுக்கப்பட்டுள்ளது. சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.பிரபா கரன், டாஸ்மாக் தொழிலாளர் சங்க மாவட் டத் தலைவர் ராமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் விசாகன் நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தார்.