விருதுநகர், அக்.30- விருதுநகர் மாவட்டத்தில் அக்டோபர் 30 தேவர் ஜெயந்தியை யொட்டி அனைத்து மதுபானக் கடை களும் தற்காலிகமாக அடைக்கப் படும் என மாவட்ட ஆட்சித் தலை வர் ஜெ.மேகநாதரெட்டி அறிவித் தார். ஆனால், ஒரு சில கடைகளைத் தவிர அனைத்து மதுபானக் கடை களும் திறக்கப்பட்டன. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். விருதுநகர் மாவட்டத்தில் செயல் பட்டுவரும் எப்.எல்1,2,3,3ஏ, எப்.எல்.3ஏஏ மற்றும் எப்.எல் -11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை, 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) 1981-ன்படி, பசும்பொன் முத்துராமலிங்கதேவர் குருபூஜை தினத்தை முன்னிட்டு 29.10.2022 அன்று மாலை 6 மணி முதல் மற்றும் 30.10.2022 அன்று முழு வதும் தற்காலிகமாக மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியரால் கடந்த அக்டோபர் 26 அன்று பத்திரிகை களுக்கு செய்திக் குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் அதில், உத்தரவை மீறி கடைகள் திறக்கப்ட்டால், டாஸ்மாக் பணியாளர்கள் மீதும், உரிமதாரர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக் கப்படும் என அதில் கூறப்பட்டி ருந்தது. இந்தநிலையில், அக்டோபர் 30 அன்று காலை முதல் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தனியார் வாக னங்கள் மூலம் பலர் குருபூஜையில் கலந்து கொள்வதற்காக இராமநாத புரம் மாவட்டத்திற்குச் சென்றனர். ஆனால், மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி ஏராளமான டாஸ்மாக் கடைகளும், தனியார் மதுபானக் கூடங்களும் எப்பொழுதும் போல் திறந்து வைக்கப்பட்டு மது விற் பனை நடைபெற்றது.
திருவில்லி புத்தூரிலும் மதுக்கடைகள் திறக் கப்பட்டிருந்தன. இதனால் பொது மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்த னர். மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி எவ்வாறு கடைகள் திறக்கப் பட்டன என பலரிடம் கேள்வி எழுப்பி னர். இதுகுறித்து மாவட்ட நிர்வா கத்திடம் கேட்ட போது, குருபூஜைக் கான வாகனங்கள் செல்லும் வழி யில் உள்ள அரசு மற்றும் தனியார் மதுபானக் கடைகளை மட்டுமே அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், கடந்த காலங்களில் இதுபோல் ஆட்சியரின் உத்தரவுக்கு மாறாக டாஸ்மாக் கடைகள் திறக் கப்பட்டு விற்பனையானது நடை பெறவில்லை. மேலும், குரு பூஜைக்காக வாகனங்கள் செல்லக் கூடிய வழித்தடங்கள் உள்ள சில மீட்டர் தூரத்திலேயே ஏராளமான டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. டாஸ்மாக் கடையை ஒரு சில நாட்கள் மூடுவதால், தேவையற்ற பிரச்சனைகளையும், சமூக பதற் றங்களையும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவே ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற நாட்களில் டாஸ்மாக் கடைகள் மூடப் படுவது வழக்கம். ஆனால், வழக் கத்தை மீறி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது வேதனையான விஷ யம் என்று தெரிவித்தனர்.