மதுரை, ஜூலை 30- பொது இன்சூரன்ஸ் ஊழி யர் சங்கத்தின் மதுரை மண் டல 27 ஆவது மண்டல ஜூலை 30 அன்று அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள சுனில் மைத்ரா அரங்கில் நடை பெற்றது. மாநாட்டிற்கு தலை வர் எம்.புஷ்பராஜ் தலைமை வகித்தார். தென்மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க இணைச் செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியம் துவக்கி வைத்து பேசினார். காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க மதுரை மண்டல பொதுச் செயலாளர் என். பி. ரமேஷ் கண்ணன், பொது இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்க கோவை மண்டல பொதுச்செயலாளர் ஆர்.வேணுகோபால், அகில இந்திய இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்கத்தின் துணைத் தலைவர் சந்திர சேகர பாரதி, பொது இன்சூ ரன்ஸ் ஓய்வு பெற்றோர் சங் கத்தின் மதுரை மண்டல பொதுச் செயலாளர் த. கோபால் ராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தென் மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஜி. ஆனந்த் சிறப்புரையாற்றினார். அரசு பொது இன்சூ ரன்ஸ் ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண் டும். 4 பொதுத்துறை இன்சூ ரன்ஸ் நிறுவனங்கள் ஒன்றி ணைக்கப்பட்டு ஒரே கழக மாக உருவாக்கிட வேண் டும். புதிய பென்சன் திட்டம் கைவிடப்பட்டு அனைவ ருக்கும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய பணி நிய மனங்களை துவங்க வேண் டும். பொதுத்துறை இன்சூ ரன்ஸ் நிறுவனங்களை பாது காக்க வேண்டும். இளை ஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாகும் அக்னி பாத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். பொது இன்சூ ரன்ஸ் அலுவலக மூடலை கைவிட வேண்டும். . மதுரை யில் தொழில் பூங்கா அமைத் திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய் யப்பட்டனர். தலைவராக பிரபு, பொதுச்செயலாளராக பாண்டியராஜான், பொரு ளாளராக செந்தில் நாயகம் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.