தென்காசி மாவட்டம் நெற்கட்டும் செவலில் அமைந்துள்ள பூலித்தேவனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பேரிடர் மற்றும் வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் , தொழில் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.