சிவகாசி, பிப்.23- சிவகாசியில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங் கம் மற்றும எஸ்.பி.ஜெ.கண் மருத்துவனை நிர்வாகமும் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தின. தொண்டர் துரைச்சாமி நினைவகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஆட்டோ சங்க தலைவர் மகேந்திர குமார் தலைமை வகித்தார். மருத்துவர் ஜெயசுதா முகாமை துவக்கி வைத்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் பி.என். தேவா, பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சக்ங மாவட்டத் தலைவர் கே.முருகன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கி னர். மேலும் இதில், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் கள் இ.பழனி, பி.அம்பேத் குமரேசன், ஆட்டோ சங்க தலைவர் பழனிச்சாமி, சிபிஎம் நகர செயலாளர் இரா.சுரேஷ்குமார் ஆகி யோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.