தூத்துக்குடி, டிச .23 கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிர மணியன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வெள்ளி யன்று காலை வந்தார். பின்னர் விமான நிலை யத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- உலகின் பல்வேறு நாடு களில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் அதை தடுக் கும் நடவடிக்கைகளை எடுப்பதற்கான மருந்து கையிருப்பு, படுக்கைகள், ஆக்சிஜன் கையிருப்பு போன்றவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆராய்ந்தார். மேலும் வெளி நாடுகளில் குறிப்பாக அமெ ரிக்கா, சீனா, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில் கொரோனா அதிகரித்து கொண்டு இருக்கிற கார ணத்தினால் அந்த நாடுகளி லிருந்து வருபவர்களுக்கு ஏதாவது அறிகுறி தென் பட்டால் அவர்களுக்கு பரி சோதனை செய்திட வேண் டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.
குறிப்பாக ஜப்பான், சீனா, ஹாங்காங் போன்ற நாடுகளிலிருந்து வருபவர்க ளை ரேண்டமாக 2 ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களில் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளோடு வந்தால் அவர்களை பரி சோதனை செய்ய வேண்டும். கோவை, மதுரை, திருச்சி, சென்னை போன்ற பன்னாட்டு விமான நிலையங்களில் நாளை முதல் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிக ளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்படும். 6 மாதத்திற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் இருக்கிறது. படுக்கைகளை பொருத்தவரை கொரோனா விற்கு என்று ஏற்கனவே ஏற்பாடு செய்த படுக்கை கள் அனைத்தும் கையிருப் பில் இருக்கிறது. அதோடு மட்டுமல்லாது, கடந்த அலை யின்போது தமிழக முதல மைச்சர் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட படுக்கைகளை கூடுதலாக, தமிழகத்தில் அனுப்புவதற்கான ஏற்பாடு களை செய்தார்கள். அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கான படுக்கைகள், தமிழ்நாடு முழுவதிலும் திறந்து வைக்கப்பட்டது. குழந்தைகளுக்கு என்றும் கூட பிரத்யேகமாக படுக்கை கள் உள்ளது.
மருந்து நிறு வனங்கள் தயாரிப்பை நிறுத்தி உள்ளதால் தமிழ கத்தில் கொரோனா தடுப்பூசி கள் கையிருப்பில் இல்லை. அதோடு மட்டுமில்லாமல், ஆக்சிஜனை கையிருப்பில் வைத்துக் கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் குறிப் பாக, ஜெனரேட்டர், ஆக்சி ஜன் சிலிண்டர் போன்ற அனைத்து உபகரணங்க ளும் தயார் நிலையில் இருக் கிறது. எனவே மக்கள் பெரிய அளவில் அச்சப்பட வேண்டி யதில்லை. தடுப்பூசி போடும் பணி முதல் தவணை 96 சதவீதம், 2-வது தவணை 92 சதவீதம் நிறைவேற்றப் பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் இருக்கிற மக்களுக்கு 90 சதவீதத்துக்கு மேல் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்ச்சி யாக இருந்து கொண்டிருக்கி றது. இந்தியா முழுவதும் கடந்த 6 மாதங்களாக பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 6 மாத காலமாக கொரோனா இறப்பு ஏதும் இல்லாத நிலை என்பது தொடர்ச்சியாக உள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தமிழகத்தில் ஒற்றை இலக்கத்தில் கொரோ னா பாதிப்பு ஏற்பட்டு வரு கிறது. வியாழனன்று பரி சோதனை செய்யப்பட்டதில் 6 பேருக்கு மட்டுமே பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது. எனவே மிக பாது காப்பான நிலையில் தமிழ கம் உள்ளது. மேலும், மக்கள் அதிகமாக கூடுகிற இடங்களில் பாதுகாப்புக் காக முக கவசங்கள் அணி வது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது மாதிரியான விதிமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.