புதுதில்லி, ஏப்.21- தெற்கு தில்லியில் உள்ள சாகேத் பகுதியில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கான கட்டடத்திற்கு வெளியே நின்றிருந்த பெண்ணை, வழக்கறிஞர் போல உடை யணிந்து வந்த நபர் துப்பாக்கியால் சுட்டார். அலறியடித்தபடி அந்த பெண் அங்கும் இங்கும் ஓடிய போதும் துரத்திச் சென்று, அடுத்தடுத்து 4 முறை துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கிச்சூட்டைக் கண்டு நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர் களும், பொதுமக்களும் என்ன நடக் கிறது என்பது அறியாமல் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட பெண்ணுக்கு வயிற்றுப் பகுதியிலும், வழக்கறிஞர் ஒருவருக்கு கழுத்திலும் குண்டு காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக 2 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கணவர் மனைவி பிரச்சனை
இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற போலீசார் நடத்திய விசாரணையில் தனிப்பட்ட பகை காரணமாக மனைவி மீது கணவன் துப்பாக்கியால் சுட்டதாக தகவல் வெளியாகியது.