districts

img

விருதுநகர் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் போராட்டம்

விருதுநகர், ஜூன்.23- விருதுநகர் மாவட்டத் தில் காட்டுப் பன்றிகளால் நிலக்கடலை, மக்காச்சோ ளம், கரும்பு  உள்ளிட்ட ஏராள மான பயிர்கள் சேதமா கின்றன. இதற்கு உரிய இழப் பீடும் வழங்கப்படுவ தில்லை.  எனவே, உடனடியாக காட்டுப் பன்றிகளை வன விலங்கு பட்டியலில் இருந்து அகற்றிட வேண்டும். பாதிக் கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணத் தொகையை காலதாமதமின்றி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டு மென வலியுறுத்தி அனை த்து விவசாயிகள் சங்கத்தி னர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத் தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து  வந்த மாவட்ட ஆட்சியர் ஜெய சீலன், வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட னர். பின்பு, வனவிலங்கு பட்டியலில் காட்டுப்பன்றி களை அகற்ற அரசுக்கு கடிதம் அனப்பப்படும். உரிய இழப்பீடு வழங்கப்படும் என ஆட்சியர் உறுதியளித்தார். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை ஒத்தி வைத்தனர்.