districts

img

வெள்ளத்தால் பாதித்த நிலம் பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில் நவ.30- குமரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக் கும்- பயிர்களுக்கும் இழப்பீடு கேட்டு பூதப்பாண்டி வட்டாட்சியர் அலுவல கம் முன்பு செவ்வாயன்று (நவ.30) விவ சாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டாரம் பூதப்பாண்டி பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார் மாவட்ட செய லாளர் ஆர். ரவி, தலைவர் சைமன் சைலஸ், துணை செயலாளர் என்.முருகேசன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மலை விளை பாசி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார செயலாளர் மிக் கேல், முன்னோடி விவசாயி சென்பக சேகரன் பிள்ளை மற்றும் அப்பகுதி விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  கன மழை காரணமாக கன்னியா குமரி மாவட்ட விவசாய நிலங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது, விவசாயி கள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ள னர். இந்த நிலையில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் பாதிக்கப்பட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தி வட்டாட்சியரிடம் மனு அளிக் கப்பட்டது.

;