districts

img

இலவம் பஞ்சு கிலோவுக்கு ரூ.100 விலை நிர்ணயித்து காதி கிராப்ட் மூலம் கொள்முதல் செய்திடுக

கடமலைக்குண்டு, மே.26- தேனி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி மே 16 செவ்வாய்க்கிழமை அன்று உத்தமபாளையம் கோட் ்டாட்சியர் தலைமையில் இலவம் பஞ்சு விலை  நிர்ண யம் தொடர்பான  முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயி கள் சங்க தேனி மாவட்ட செயலாளர் கண்ணன் தலை மையில் கடமலை-மயிலை ஒன்றியத்தை சேர்ந்த இலவும் பஞ்சு விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழகத்தில் 90 சதவிகி தம் இலவம் பஞ்சு தேனி  மாவட்டத்தில் உற்பத்தி யாகிறது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் இருந்து 2000 லோடு பஞ்சு உற்பத்தி செய்து வியாபாரிகள் மூலம் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை இலவம்பஞ்சு சராச ரியாக 100 ரூபாய்க்கும் அதி கமாக விற்பனையாகி வந்தது இதனால் இல வம்பஞ்சு விவசாயிகளுக்கு வருடத்திற்கு ஒருமுறை அதிக அளவில் வருவாய் கிடைத்தது. இந்தச் சூழ்நிலையில் உள்ளூர் வியாபாரிகள் சிலர் ஒன்று சேர்ந்து பஞ்சு விலையை அறுபதுக்கும் கீழ் குறை த்து நிர்ணயம் செய்து விவ சாயிகளிடமிருந்து கொள் முதல் செய்கின்றனர்.

மேலும் குறைந்த விலை க்கு கொள்முதல் செய்து அதனை அதிக விலைக்கு விற்பனை செய்து வியாபா ரிகள் மட்டும் அதிக அளவில் லாபம் ஈட்டி வரு கின்றனர். தேனி மாவட்டத்தை தவிர்த்து மற்ற மாவட்டங் களில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 80 ரூபாய் வரை இலவம்பஞ்சு விற்பனை ஆகிறது .பஞ்சு விலை குறைவிற்கு உள்ளூர் வியாபாரிகளே முக்கிய கார ணமாக உள்ளனர். எனவே இலவம் பஞ்சு விவசாயிகள் பயனடையும் வகையில் ஒரு கிலோ 100 ரூபாய் என அரசு விலை நிர்ணயம் செய்து  காதி கிராப்ட் மூலம் விவசா யிகளிடம்  கொள்முதல் செய்ய வேண்டும்,  தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் விவசாயிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்க வேண்டும், கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்க ளில் பஞ்சு இருப்பு வைக்க வசதியாக குடோன்கள் கட்டிக் கொடுக்க வேண்டும், உள்ளூர் வியாபாரிகளை அழைத்து அரசு நிர்ணயம் செய்த விலைக்கு கீழ் பஞ்சு கொள்முதல் செய் யக்கூடாது என வலியு றுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை விவசாயி கள் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக அடுத்த கூட்டத்தில் முக்கிய முடிவு கள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.