districts

மதுரை முக்கிய செய்திகள்

பலத்த காற்று மழையால் முருங்கை மரங்கள் சேதம் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

சின்னாளபட்டி, ஜூலை 30- திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி, அணைப்பட்டி, பள்ளப்பட்டி, கொடைரோடு ஆகிய பகுதிகளில் கடந்த  மூன்று நாட்களாக மாலை மற்றும் இரவு நேரத்தில் பலத்தக் காற்று, இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமையன்று  மாலை பெய்த மழை யினால் அப்பகுதி தோட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முருங்கை மரங்கள் காய் பிஞ்சுகளுடன் மகசூல் கொடுக்  கும் நேரத்தில் ஒடிந்து சேதமாகின. இதனால் விவசாயிகள்  கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறை தண்டனை பெற்ற ஊராட்சி செயலாளர் ஆவணங்களை எரித்ததாக ஊராட்சி தலைவர் புகார் 

தேனி, ஜூலை 30- அரசு இடத்தை தனியாருக்கு விற்பனை செய்து சிறை  தண்டனை பெற்ற ஊராட்சி செயலர் ஊராட்சி அலுவலகத்  திற்குள் நுழைந்து முக்கிய ஆவணங்களை எரித்ததாக ஊராட்சி தலைவர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆண்டிபட்டி  ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திரு மலாபுரம் ஊராட்சியில் கடந்த பல வருடங்களாக ஊராட்சி  செயலராக  க.விலக்கு பகுதியை சேர்ந்த குமரேசன் பணி புரிந்து வருகிறார்.  பிஸ்மி நகர் பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா அமைப்பதற்காக அரசு 10 சென்ட்  அளவில் இடம் ஒதுக்  கப்பட்டு அதற்காக பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.  பூங்கா அமைப்பதற்கான ஒதுக்கப்பட்ட இடத்தை ஊராட்சி செயலர், ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகிய மூன்று நபர்களும் பிளாட் போட்டு விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து அப்போது வட்டார  வளர்ச்சி அலுவலராக இருந்த ரங்கராஜ் என்பவர் காவல்  துறையிடம் புகார் அளித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்  ரங்கராஜ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். ரங்கராஜ் அளித்த புகாரால் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு ஊராட்சி செயலர் குமரேசன் மற்றும் தலை வர் பழனியம்மாள் ஆகியோருக்கு நீதிமன்றம் ஓராண்டு  சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.  இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு ஊராட்சி செயலர் குமரேசன் திருமலாபுரம் கிராமத்தில் அமைந் துள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் நுழைந்து முக்கிய ஆவணங்களை தீ வைத்துக்கொளுத்தினர். இது குறித்து தற்போதைய ஊராட்சி மன்ற தலைவர் கனிராஜ் க.விலக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

இராமேசுவரம் கோவிலில் அடிப்படை  வசதிகள்  இல்லாத வாகன நிறுத்துமிடம் 

இராமநாதபுரம், ஜூலை 30-     இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரத்திற்கு வரும் அனைத்து வாகனங்களுக்கு நகராட்சி சார்பில் நுழைவுக் கட்டணமாக சிறிய வாக னத்திற்கு ரூ. 100,பேருந்து உள்ளிட்ட பெரிய வாகனத்திற்கு ரூ 150 வசூல்  செய்யப்படுகிறது. ஆனால் வாகனங்கள் நிறுத்தும்  பகுதியில் குடிநீர், மின்சா ரம்,கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள்  இல்லாத நிலை உள்ளது.  இதே போன்று கோவிலுக்கு மிகவும் அருகாமையில் இந்து அறநிலைத்  துறை சார்பில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த செல்லும்  வாகனங்களுக்கு குறைந்த கட்ச கட்டணமான ரூ. 20 வசூல் செய்யப்படு கிறது. அங்கும் வரும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு குடிநீர்,கழிவறை உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன. ஆனால் இரண்டு ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாததால் வாகன ஓட்டிகள் மற்றும் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக ஆண்டுக்கு ரூ.20 கோடி வரை கிடைக்கிறது. மேலும் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தம் நீராடஆண்டுக்கு 3 கோடி, பிரசாரம்  உள்ளிட்ட பொருட்கள் விற்பனை 2 கோடி,தங்கம் விடுதிகள் 2 கோடி, என  ஆண்டுக்கு கோயில் வருவாய் பல கோடி ரூபாய் வரை கிடைக்கும் ஆனால்  கோயிலுக்கு வருபவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நிர்வா கம் முன் வருவதில்லை. இதனால் இந்துசமய அறநிலைத்துறை பக்தர்க ளின் அடிப்படை வசதிகள்,குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகளை செய்து  கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரயில் போக்குவரத்தில் மாற்றம்

மதுரை, ஜூலை 30- சிவகங்கை - மேல கொன்னகுளம், திருப்பாச்சேத்தி - மானாமதுரை மற்றும்  சூடியூர் - பரமக்குடி ரயில் நிலை யங்கள் இடையே ஆகஸ்ட் மாதத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் இராமேஸ்வரம் - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில்  (06652) ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை வியாழக்கிழ மைகள் தவிர இராமேஸ்வரத்தில் இருந்து காலை 11 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 01.30 மணிக்கு  150 நிமிடங்கள் காலதாமதமாகவும், மதுரை - இராமேஸ்வ ரம் சிறப்பு ரயில் (06653) மதுரையிலிருந்து மதியம் 12.30 மணிக்கு பதிலாக மதியம் 01.10 மணிக்கு 40 நிமி டங்கள் தாமதமாகவும் புறப்படும். மேலும் திருச்சி - மானா மதுரை - திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் (06829/06830) ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 4 வரை  சிவ கங்கை - மானாமதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். திண்டுக்கல் - அம்பாத்துரை ரயில் நிலையங்களுக்கி டையே நடைபெறப்போகும் பராமரிப்பு பணிகளால் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை செவ்வாய், வெள்ளி,  சனிக்கிழமைகளில் கோயம்புத்தூர் - நாகர்கோயில் பகல்  நேர விரைவு ரயில் (16322) 90 நிமிடங்கள் காலதாமத மாக இயக்கப்படும். இதே காலத்தில் சென்னை - குரு வாயூர் விரைவு ரயில் (16127) மதுரை கோட்டப் பகுதி யில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் 70 நிமிடங்கள் காலதாமதமாகவும் வெள்ளிக்கிழமைகளில் 95 நிமி டங்கள் கால தாமதமாகவும் இயக்கப்படும்.

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த விளக்க கூட்டம்

விருதுநகர், ஜூலை 30- பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பிரச்சனை களை பேசி தீர்க்க வேண்டும். 40 ஆண்டுகளாக நடைமுறை யில் இருந்த ஊதிய விகிதங்களை மீண்டும் வழங்க  வேண்டும்.  1.4.2003க்குப் பின் பணியில் சேர்ந்தவர்களுக் கும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர், சிவ கங்கை மாவட்டத்தில் சிஐடியு-அரசுப் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில்  வேலை நிறுத்த விளக்க வாயிற்கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் பணிமனை,  சிவகாசி,சாத்தூரில் நடை பெற்றது.சிவகாசியில் மண்டலத் தலைவர் ஏ.சுந்தர ராஜ்,  மண்டல பொதுச்செயலாளர் எம்.வெள்ளைத்துரை ஆகியோர் பேசினர்.  சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, தேவ கோட்டை, சிவகங்கை  ஆகிய 3 இடங்களில் வாயிற்கூட்டம் நடைபெற்றது. பொதுச் செயலாளர் தெய்வீரபாண்டியன், சிஐடியு மாவட்ட தலைவர் வீரையா, சிஐடியு மாவட்ட செயலாளர் சேதுராமன்  ஆகியோர் பேசினர். பழனி போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற  கூட்டத்தில் மண்டல தலைவர் எம்.கந்தசாமி பேசினார்.

5 மாவட்ட மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

66 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்

தேனி, ஜூலை 30- கனமழை காரணமாக வைகை  அணை நீர்மட்டம் 66 அடியை எட்டி யதை தொடர்ந்து 5 மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்ச ரிக்கை விடுக்கப்பட்டது.  மேற்குத்  தொடர்ச்சி மலை மற்  றும் தேனி மாவட்டத்தில் பெய்து  வரும் தொடர் கனமழை காரண மாகவும், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்  ணீர் திறக்கப்பட்டதாலும் வைகை  அணைக்கு நீர்வரத்து அதிகரித் துள்ளது. இதன் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் சனிக்கிழமையன்று  அதி காலை காலை 6 மணிக்கு 66 அடி யை எட்டியது. இதையடுத்து தேனி,  மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்க ளுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வைகை அணை மதகு பகுதியில் அமைக்கப்பட்ட அபாயச்சங்கு ஒலிக்கப்பட்டது. வைகை அணை யை பொறுத்த வரையில் தற்போது நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 288 கன அடியாக உள்ளது. அணை யில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 69 கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணை விரைவில் முழுக்  கொள்ளளவை எட்டும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அணை நீர்மட்டம் 68.50 அடியாக உயர்ந்தவுடன் இரண் டாம் கட்ட வெள்ள அபாய எச்ச ரிக்கை விடுக்கப்பட்டு 69 அடியை  எட்டியவுடன் 3 ஆவது மற்றும் கடைசி வெள்ள அபாய எச்ச ரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு  வரும் தண்ணீர் அப்படியே உபரி யாக ஆற்றில் திறந்துவிடப்படும் என்றும் பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.  

முல்லை பெரியாறு அணை யின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் நீர்பிடிப் பில் மழை குறைந்ததால் நீர்வரத்து குறைய தொடங்கியது. தற்போது மீண்டும் அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டும் என எதிர் பார்க்கப்படுகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 134.05 அடியாக உள்ளது. வரத்து 2002 கன அடி, திறப்பு 1600 கனஅடி, இருப்பு  5645 மி.கனஅடி.  57 அடி உயரம் உள்ள மஞ்ச ளாறு அணையின் நீர்மட்டம் 52.90 அடியாக உள்ளது. இதனால் இந்த அணையும் விரைவில் முழு  கொள்ளளவை எட்டும் என எதிர் பார்க்கப்படுகிறது. தற்போது தேனி, திண்டுக்கல் மாவட்ட மஞ்ச ளாறு கரையோர பகுதி மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து 157 கனஅடி யாக உள்ளது. இருப்பு 393 மி.கன  அடி.சோத்துப்பாறை நீர்மட்டம் 106.27 அடியாக உள்ளது. வரத்து  98 கனஅடி, திறப்பு 3 கன அடி, இருப்பு 69.07 மி.கன அடி. பெரிய குளம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பெய்த கனமழை காரணமாக கும் பக்கரை அருவியில் தொடர்ந்து  தண்ணீர் வரத்து அதிகரித்துள் ளது. இதனால் 3-வது நாளாக சனிக்  கிழமையன்றும் சுற்றுலா பயணி கள் குளிக்க தடைவிதிக்கப்பட் டுள்ளது. இதேபோல போடி கொட்ட குடி ஆற்றில் தண்ணீர் வரத்து அதி கரித்து காணப்படுகிறது.  மழையளவு வைகை அணை 94, பெரிய குளம் 145, மஞ்சளாறு 3, சோத்துப்  பாறை 30, போடி 3.2, மி.மீ மழை யளவு பதிவாகி உள்ளது.

போடியில் முன்னாள் ராணுவ வீரர்  பட்டப்பகலில் வெட்டிக் கொலை

போடி, ஜூலை 30- போடியில் சனிக்கிழமையன்று முன்னாள் ராணுவ வீரர்  மக்கள் நடமாட்டம் மிகுந்த தலைமை தபால் நிலை யம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.  போடி ஜக்கமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன் (70) .இவர் முன்னாள் ராணுவ வீரர். இவர்  போடியில் தனியார் தங்கும் விடுதி நடத்தி வந்தார். சனிக்கிழமை பகலில் போடி தலைமை அஞ்சல் அலுவல கம் முன் இரு சக்கர வாகனத்தில் வந்தவருடன், மர்ம  நபர்கள் 5 பேர் கொண்ட கும்பல் தகராறு செய்துள்ளனர்.  பின்னர் அவரை சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார்.  மர்ம கும்பல் அவர்கள் வந்த ஜீப்பில் தப்பி விட்டனர்.  கேரள பதிவெண் கொண்ட ஜீப் என்பது தெரியவந்துள்ள தால் கொலையாளிகள் கேரளத்திலிருந்து வந்தவர்களா என போலீஸார் விசாரித்து வருகின்றனர். பட்டப் பகலில்  மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கொலை சம்பவம்  நடந்துள்ளதால் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. சம்பவம் குறித்து போடி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மானாமதுரை அருகே மின்சாரம் தாக்கி  இராணுவ வீரர் உட்பட 3 பேர் பலி

சிவகங்கை, ஜூலை 30- விருதுநகர் மாவட்டம் திருச்சூழி ஒன்றியத்துக்கு உட்பட்ட முகவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் என்ற  அய்யங்காளை (52). இவரது மகன்கள் அஜித் (25) இராணுவ  வீரர், சுகந்திரபாண்டி( 23) . இவர்கள் மூன்று பேரும் சிவ கங்கை மாவட்ட எல்லை மாரனாடு கிராமம் அருகே முத்துகுமார் என்பவரின் வயல்வெளி பகுதியில் வந்த போது பன்றிக்கு வைத்த மின் கம்பியை மிதித்ததில் மின்சா ரம் பாய்ந்து மூவரும் பலியாகினர். இந்த சம்பவம் முகவூர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பாச்சேத்தி போலிசார் 3 பேரின்  உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  இராணுவ வீரர் அஜித் கடந்த சில தினங்களுக்கு முன்புதான்  விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்தார். 

கண்ணகி கோவிலுக்கு பளியன்குடி வழியாக சாலை  சர்வே பணி நிறைவு: தேனி ஆட்சியர் தகவல் 

தேனி, ஜூலை 30- கண்ணகி கோவிலுக்கு பளியன்குடி வழியாக சாலை  அமைக்கும் பணிக்காக நிலம் அளவிடும் பணி நிறைவு பெற்றுள்ளதாக  தேனி மாவட்ட  ஆட்சியர் க.வீ .முரளீதரன் தெரிவித்துள்ளார். தேனி மாவட்ட  விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேனியில் மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில்  மாவட்ட  வன அலுவலர் சமர்ந்தா, மாவட்ட ஊரக வளர்ச்சி முக மையின் திட்ட இயக்குநர் இரா.தண்டபாணி, வேளா ண்மை இணை இயக்குநர் (பொ) அனுசுயா, உத்தம பாளையம் வருவாய் கோட்டாட்சியர் கௌசல்யா, மாவட்ட  ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவ) பொ.தனலட்சுமி  மற்றும் விவசாயிகள், மற்றும் விவசாய சங்க பிரதிநிதி கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்  துறையின் மூலம் செயல்படுத்தப்படும் சொட்டு நீர் பாசன  திட்டத்திற்கு மானியத் தொகை, பி.எம்.கிஷான் தொகை  விவசாயிகளுக்கு விரைந்து கிடைத்திட வழிவகை செய்தி டவும்,  பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியை பல்க லைக் கழகமாக உயர்த்த வேண்டும் .மேலும், அரசுக்கு  சொந்தமான இடங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து, வியாபாரிகளின் தலையீட்டை தடுக்க வேண்டும் . தேக்கு மரங்களை வெட்டுவதற்கு அனு மதி வழங்க வேண்டும் . 18 ஆம் கால்வாயில் உள்ள தொட்டிப்பாலம் உடைப்பை சரி செய்து தரவும், அரண்  மனை கண்மாய்க்கு விரைந்து தண்ணீர் வசதி வழங்கிட வும், இருபோக சாகுபடிக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

விவசாயிகள் சங்கம் எழுப்பிய கேள்வியால் நடவடிக்கை ஆடு, மாடு, கோழிகளுக்கு சந்தைகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலித்திடுக!

திண்டுக்கல் ஆட்சியர் உத்தரவு

திண்டுக்கல், ஜுலை 30- ஆடு,மாடு, கோழிகளுக்கு சந்தைகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தையே ஒப்பந்த காரர்கள் வசூலிக்க வேண்டும் என்று திண்  டுக்கல் ஆட்சியர் விசாகன் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.  திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்  தின்  மாவட்டச்செயலாளர் என்.பெருமாள்  பேசுகையில், ஒட்டன்சத்திரம் சந்தையில் கோழியின் விலையில் பாதி அளவு அதா வது ரூ.70 வரை நுழைவு கட்டணம் வசூ லிக்கப்படுகிறது. அதே போல கோழியை வாங்கி வரும் போதும் ரூ.70 வரி கட்ட வேண்டிய நிலை உள்ளது. இதே போல மாட்டுக்கு ரூ.250 வசூலிக்கப்படுகிறது. ஆட்டுக்கு ரூ.100 வசூலிக்கப்படுகிறது. ஆனால் அரசு நிர்ணயித்த கட்டணம் மாட்  டுக்கு ரூ.20ம், ஆட்டுக்கு ரூ.10ம், கோழிக்கு  ரூ.5ம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால்  ஒப்பந்தத்திற்கு மாறாக பல மடங்கு வசூ லிக்கும் ஒப்பந்தக்காரர்கள் அதற்கான ரசீதை தருவதில்லை என்று கூறப்படுகிறது.  இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உரிய  தலையீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தரமற்ற விதைகள் வழங்கிய தனியார் நிறுவனங்கள்

மேலும் கூறுகையில்,  தொப்பம்பட்டி ஒன்றியம் சின்ன வல்லகுண்டாபுரம் கிரா மத்தில் 100 ஏக்கருக்கு மேல் சூரியகாந்தி பயி ரிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தனியார் நிறுவனத்திடம் 2 கிலோ விதை ரூ.3700  விலை கொடுத்து வாங்கி பயரிட்டுள்ளனர்.  ஆனால் இந்த சூரியகாந்தி பயிரில் விதை பிடிக்கவில்லை. இதனால் விவசாயி கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அறுவடை காலத்தில்  இந்த பாதிப்பு மிகுந்த  சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியர்  இது தொடர்பாக தரமற்ற விதைகளை வழங்  கிய அந்த 2 தனியார் நிறுவனங்கள் மீது நட வடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு உரிய  இழப்பீடு வழங்க வேண்டும் என்று என்.பெருமாள் கேட்டுக்கொண்டார். இதற்கு ஆட்சியர் விசாகன் பதில ளிக்கையில், திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் அனுமதி பெற்று, குளங்களில்  இலவசமாக வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.  100 நாள் வேலை திட்டத்தில் இந்த ஆண்டு  50 லட்சம் மனிதசக்தி நாட்கள் என திட்ட மிடப்பட்டு, விவசாய வரப்பு கட்டுதல்,  வாய்க்கால் கட்டுதல், அரசு திட்டங்களில்  வீடு கட்டும் பணிகளுக்கும் பயன்படுத்தப் பட்டு வருகிறது. தொப்பம்பட்டி பகுதியில்  தனியார் நிறுவனம் வழங்கிய சூரியகாந்தி  விதையின் காரணமாக விளைச்சல் பாதிப்பு  தொடர்பாக குழு அமைக்கப்பட்டு நடவ டிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் பயன்  பெறும் வகையில் ஆடு, மாடு, கோழி  விற்பனை சந்தைகளில் அரசு நிர்ணயிக் கப்பட்டுள்ள கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும். விவசாயிகள் அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி விவசாய பணிகளை மேற்கொள்ள வேண்  டும் என்று தெரிவித்தார்.      (ந.நி.)

தனுஷ்கோடி கடற்கரையில் 70 கிலோ கஞ்சா பறிமுதல்

இராமநாதபுரம், ஜூலை 30-  இராமநாதபுரம் மாவட்டம்,  தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள கம்பிபாடு கடற்கரையில் இரண்டு சாக்கு மூட்டைகள் கரை ஒதுங்கி உள்ளதாக மீனவர்கள் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர் மூட்டையை சோதனையிட்ட போது அதில் தடை செய்யப்பட்ட 70 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. மேலும் இந்த கஞ்சா இலங்கைக்கு கடத்தும் போது கரையிலோ அல்லது கடலில் தவறி கடலில் விழுந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்றும்  கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.