விருதுநகர், அக்.28- கண்மாய் பகுதியில் விதிமுறை களை மீறி அதிக ஆழத்திற்கு மண் அள்ளுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப் படும் நிலை உள்ளதாக குறைதீர் கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட விவ சாயிகள் புகார் தெரிவித்தனர். விருதுநகர் அருகே உள்ள ஆவு டையாபுரம், தாயில்பட்டி, வெம்பக் கோட்டை அருகே உள்ள குகன்பாறை, ஏழாயிரம்பண்ணை, சாத்தூர் அருகே உள்ள கோசுகுண்டு, புல்வாய்பட்டி, முகவூர், புதுக்கோட்டை ஆகிய பகு திகளில் உள்ள தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு நகையின்றி பயிர்க்கடன் தர செயலா ளர்கள் மறுத்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுகளை மீறி செயல்படுகின்றனர். எனவே, வங்கிச் செயலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.முருகன் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த ஆட்சியர், அரசு உத்தரவை மீறினால் கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பின்பு, பேசிய கூட்டுறவுத்துறை அதி காரி, ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை தனி நபர் ஜாமீனில் பயிர் கடனாக வழங்க உத்தரவு உள்ளது. மேலும், தற்போது வரை மாவட்டத்தில் 6395 பேருக்கு ரூ.55 கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது என தெரி வித்தார்.
காரியாபட்டி வட்டத்திற்கு உட்பட்ட சாலை மறைக்குளம் கிராமத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் மடை வாறுகால்களை சீரமைக்க வேண்டு மென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.முருகன் தெரிவித்தார். அதிகமான தோட்டக் கலை பயிர்கள் காரியாபட்டி அரசகுளம், ஆவியூர், மாங்குளம் பகுதியில் விவசா யம் செய்யப்படுகிறது. ஆனால், இன்சூரன்ஸ் தொகை கிடைப்பதில் பாரபட்சம் இருப்பதாகவும் விவசாயி ஒருவர் புகார் தெரிவித்தார். அருப்புக்கோட்டை பெரியகுளம் கண்மாய் மூலம் கடந்த காலங்களில் 500 ஏக்கர் விவசாயம் செய்யப்பட்டது. தற்போது தண்ணீருடன் சாக்கடையும் கலந்து உள்ளது. எனவே, அதை அகற்ற வேண்டுமென விவசாயி ஒருவர் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த ஆட்சியர், அந்த கண்மாயை சீரமைக்க ஏராள மான நிதி தேவைப்படும். முதற் கட்டமாக, ரூ.49 லட்சம் செலவில் பல்வேறு பணிகள் அங்கு நடைபெற உள்ளன என்று தெரிவித்தார். புளியம்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் ஏராளமான காட்டுப் பன்றி கள் உள்ளன. இதனால், அங்கு பயிர்கள் பெருமளவில் சேதமாகிறது. கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்க ளில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, வன விலங்கு பட்டியலில் இருந்து பன்றிக ளை அகற்ற வேண்டும் என விவசாயி கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது பதில் கூறிய ஆட்சியர், பன்றிகளை கட்டுப்படுத்த கடிதம் எழுதியுள்ளேன். அமைச்சருடன் பேசி முடிவு எடுத்த பின்பு, நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
ஆவுடையாபுரம் பகுதியில் தனி நபர்கள் 200 பன்றிகள் வரை வளர்க்கின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். பட்டம்புதூர் கூட்டுறவு வங்கியில் மேற்பார்வையாளர் தவறு செய்து விட்டார் என்பதற்காக சொசைட்டியை பூட்டியே வைத்துள்ளனர். இதனால், விவசாயிகள் பெரும் மன உலைச்சலு க்கு உள்ளாகியுள்ளனர் என விவசாயி ஒருவர் புகார் தெரிவித்தனர். சாத்தூர் அருகே கே.முத்துச்சாமி புரத்தில் சுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லை. இதனால், இறந்தவரின் உடல்களை சுமந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயி தெரிவித்தார். இதில் உடனடியாக விசாரணை நடத்தப்படும் என ஆட்சியர் பதில் கூறினார். திருவில்லிபுத்தூர் அருகே பிள்ளை யார்குளம் கண்மாய் பகுதியில் விதி முறைகளை மீறி அளவுக்கு அதிக மான மண் அள்ளப்படுகிறது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுகிறது. மேலும், அரசுக்கு இதனால் பலகோடி ரூபாய் பணம் விரயமாகிறது. தற்போது கண்மாய்க்குள் மண் இல்லை. கரை மட்டும் தான் உள்ளது. எனவே, மண் அள்ளுவதை தடுக்க வேண்டும்.இலந்தைகுளம் கண் மாய்க்கு வரம் நீர்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். என விவசாயி ஒருவர் தெரிவித்தார்.
விவசாயிகளிடம் உணவுபாது காப்புத்துறையினர் வந்து கட்டாயப் படுத்தி ரூ.600 ஐ பெற்றுச் சென்றுள்ள னர். விதிமுறைகளின்படி விவசாயிகள் லைசென்ஸ் எடுக்க வேண்டியதில்லை. எனவே, வாங்கிய பணத்தை திரும்பத் தர வேண்டுமெனவும், விவசாய நிலம் உள்ள பகுதிக்கான வங்கியில் மட்டுமே கடன் பெற வேண்டும் என அரசு உத்தர விட்டுள்ளது. இதனால், ஏற்கனவே, வங்கி கணக்கு வைத்துள்ள விவசாயி கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, பழைய நடைமுறைப்படியே கடன் தர வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராமசுப்பிரமணியராஜா தெரிவித்தார். அதற்கு பதிலளித்த ஆட்சியர் அரசு உத்தரவை மீற முடியாது. எனவே, அரசுக்கு இதுகுறித்து கடிதம் எழுதலாம் என தெரிவித்தார். மேலும் இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.