தேனி, ஜூலை 16- நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்த நிலையில் முல்லைப்பெரியாறு அணை யின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. ஜூலை மாதத்தில் பருவமழை தீவிரம டைந்து அணைப் பகுதியில் மழை பெய்தது. இதனால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து 120 அடியை எட்டியது. இந்த நிலை யில் தற்போது மழை முற்றிலும் ஓய்ந்து விட்டது. இதனால் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. ஞாயிறுகாலை நில வரப்படி நீர்மட்டம் 119.90 அடியாக உள்ளது. 301 கனஅடி நீர் வருகிறது. அணையிலி ருந்து தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 50.03 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து குறைந்தது. இதனால் வைகை அணைக்கு நீர் வரத்து அடியோடு நின்று விட்டது. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 29.04அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப் படுகிறது. சுருளி அருவியில் குளிக்க அனுமதி மேகமலை, ஈத்தக்காடு வனப் பகுதி யில் பெய்த தொடர் மழை காரணமாக சுருளி அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் யானை கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிப் பதற்கு வனத்துறையினர் தடை விதித்த னர். இந்நிலையில் தற்போது தண்ணீர் வரத்து சீரடைந்ததால்ஒரு வாரத்திற்கு பிறகு அருவியில் குளிக்க சுற்றுலா பய ணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.