districts

img

ஓசூரில் போலிச் சாமியார் கைது

கிருஷ்ணகிரி, மார்ச் 7 - ஓசூர் மற்றும் சுற்றுப்புறங்க ளில் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த போலிச் சாமியார்,  மார்க்சிஸ்ட் கட்சி தலையீட்டால் கைது செய்யப்பட்டார். தேன்கனிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 25 வயது தனுஷ். இவர் சாமியார் போல உடைகள் அணிந்து அப்பகுதியில் பலருக்கும் அருள்வாக்கு சொல்லி வந்ததாக அவர் பல வீடியோக்களை வெளி யிட்டுள்ளார்.  தற்போது ஓசூர் மாநகரம், அலசநத்தம் பகுதியில் 25 வயது சுமாவை திருமணம் செய்தார். சுதா, குழந்தை பெற்றுக்கொள்ள தாய் வீட்டிற்கு சென்ற நிலையில், கவிதா என்ற இன்னொரு பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.  அவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆனது தெரிய வந்ததும், கவிதாவை கொன்று விடுவதாக மிரட்டியதுடன் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்த தகவலை அறிந்த சுமா இதுகுறித்து தனுஷிடம் கேட்டபோது அவரையும் அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்த நிலையில், இதற்கும் முன்பாக இரண்டு பெண்களை திருமணம் செய்து விவாகரத்து செய்துள்ளது தெரியவந்தது. இந்த நிலையில்,  கவிதா,சுமா இருவரும் கைக்குழந்தையுடன் புதன்கிழமை (மார்ச் 5 ) ஓசூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  இதுகுறித்த தகவல் அறிந்து  மார்க்சிஸ்ட் கட்சி மாநகர குழு செயலாளர் நாகேஷ் பாபு, செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, மாநகர குழு உறுப்பினர்கள் பி.ஜி.மூர்த்தி, வெண்ணிலா கிளைச் செயலாளர் புனிதா, மாதர் சங்க மாவட்டத் தலைவர் சரஸ்வதி, செயலாளர் ராதா ஆகியோர் இந்த விவகாரத்தில் தலையிட்டனர். போலி சாமியார் தனுஷ் என்பவரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.  மேலும், போலி சாமியார் தனுஷ் மீது சட்ட ரீதியான சரியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.  மேலும், மார்ச் 7 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர், இந்த நிலையில், போலி சாமியார் தனுஷ் மீது,பட்டியலின பெண்கள் மீதான வன்கொடுமைகள்,ஏமாற்றி திருமணம் செய்தது குறித்து சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைது சிறையில் அடைத்தனர்.