திருவனந்தபுரம், டிச. 7- வக்பு வாரிய பணி நியமனங்களை பணி யாளர் தேர்வாணையத்துக்கு (பிஎஸ்சி) விடுவது குறித்து விரிவான விவாதம் நடத்தப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அனைத்து தலைவர்களுடனான சந்திப்பின் போதே இதனை முதல்வர் தெரிவித்துள்ளார். வக்பு வாரியம் நியமனம் குறித்த முடிவெ டுத்து அரசிடம் தெரிவித்துள்ளது. இது அரசின் பரிந்துரை அல்ல. எனவே, இந்த விவகாரத்தில் அரசுக்கு எந்த கருத்தும் இல்லை என்று முதல்வர் விளக்கம் அளித் துள்ளார். இதில் எவ்வித பிடிவாதமும் அரசுக்கு இல்லை எனவும், நியமனம் குறித்து விரிவான விவாதம் நடை பெறும். முடிவு எடுக்கும் வரை தற்போதைய நிலையே தொடரும். பிஎஸ்சியில் இருந்து வெளியேறினால் முஸ்லிம் அல்லாதவர்க ளுக்கும் வக்பு வாரியத்தில் வேலை கிடைக்கும் என்ற பிரச்சாரம் குறித்தும் சமஸ்தா தலைவர்கள் முதல்வரின் கவ னத்திற்கு கொண்டு சென்றனர். இது உண்மைக்கு மாறான பிரச்சாரம் என்று முதல்வர் கூறினார். அத்தகைய கவலைக்கு எந்த அடிப்படையும் இல்லை என்று முதல்வர் கூறினார்.