அருமனை, டிச.15- கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே முழுக்கோட்டில் மாவட்ட ஆட்சிய ரின் மனுநீதி திட்ட முகாம் நடைபெற்றது.இம்முகாமில் அனைத்து துறையின் மாவட்ட, தாலுகா,கிராம நிர்வாக அதிகாரி கள் உட்பட பங்கேற்றனர்.மற்றும் முழுக் கோடு ஊராட்சி தலைவர் மரிய செல்வி விலாசினி, துணைத்தலைவர் சசிகுமார், மேல்புறம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பேபி, விள்ளாங்கோடு ஊராட்சி தலைவர் கிறிஸ்டோபர் ,ஊராட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள்,பயனாளிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும்போது, மாணவர்களை போதை பொருட்கள் பக்கம் திரும்பாமல் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீதும், விநியோகம் செய்பவர்கள் மீதும் அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வரு கிறது.
போதைப் பொருட்களை தடுக்க பொது மக்களும், பெற்றோர்களும், மாணவர்களும் இணைந்து முழுமையாக செயல்பட்டால் போதைப் பொருட்களை தடை செய்ய முடியும். எனவே பிள்ளைகள் மீது பெற் றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார். குப்பை இல்லா குமரி குமரி மாவட்டத்தில் அனைத்து பகுதி மக்களும் பழைய காலங்கள் போல் தங்க ளுடைய இடங்களிலே குப்பைகளை உரங்களாக மாற்றும் திட்டத்தைதொடர வேண்டும். வீட்டு வளாகத்தில் வசதி இல்லாதவர்கள் குப்பைகளை தனித்தனி யாக பிரித்து தூய்மை காவலர்கள் வீட்டிற்கு வரும் போது எடுத்துக் கொடுக்க வேண்டும். குப்பைகளை தெருக்களில் வீசுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். வீடுகளில் இருந்து வெளியே வருகின்ற கழிவு நீரை உறிஞ்சி குழாய் அமைத்து பராம ரிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து ஏற்கனவே மனுநீதி முகாமில் மனுக்கள் கொடுத்த பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியம் 24, வீட்டுமனை பட்டா 7, எஸ்.ற்றி வகுப்பி னருக்களுக்கான சான்றிதழ்கள் 3, மற்றும் தையல் மெஷின் இரண்டு நபர்களுக்கு வழங்கப்பட்டது.