districts

வாரச்சந்தைக்கு தடைவிதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மதுரை, மே 17-  மதுரை ஹார்விப்பட்டி செங்குன்றம் நகர் பகுதியில் நடைபெறும் வாரச் சந்தைக்கு தடை விதிக்கக்கோரிய மனு வை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்  துள்ளது. மேலும் ஒவ்வொரு குடிமக னுக்கும் வர்த்தகம் மற்றும் வணிகம் மேற்  கொள்வதற்கு அடிப்படை உரிமை உள்ளது என்று உத்தரவிட்டுள்ளது. இதுகுறிதது மதுரையை சேர்ந்த தவமணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் “ மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலு காவில் செங்குன்ற நகர் ,ஹார்விபட்டி பகுதி யில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் எந்த வித முறையான அனுமதியும் பெறா மல் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டி ருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி  சி. வி. கார்த்திகேயன் முன்பு புதனன்று நடை பெற்றது.  அப்போது நீதிபதி கூறுகையில், மனு தாரர் தாக்கல் செய்த மனுவில் வாரச் சந்தை நடைபெறுவதில் மனுதாரர் மற்றும் சிலருக்கு குறைகள் இருப்பதாகவும் நஷ்டங்கள் ஏற்படுவதாகவும் தெரி வித்திருக்கிறார். ஆனால் மனுதாரர் அவர் சார்பாக மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளார். மற்ற  பலரின் சார்பாக வாதிட முடியாது. எவ்வா றாக இருப்பினும் வர்த்தகம் மற்றும் வணி கம் நடத்தப்படுவதை  நீதிமன்றம் தடுக்க முடியாது. மேலும் சந்தை வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வாரச்சந்தையாகவே செயல்படுகிறது. மனுதாரர் மனு தாக்கல் செய்து விட்டார் என்பதற்காக மட்டுமே நேரடியாக தடுக்க உத்தரவு வழங்க முடி யாது. இது இந்திய அரசியலமைப்பு சட்  டத்திற்கு எதிரானது .மேலும் ஒவ்வொரு குடிமகனுக்கும் வர்த்தகம் மற்றும் வணிகம் மேற்கொள்வதற்கு அடிப்படை உரிமை உள்ளது என தெரிவித்து வழக் கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.