இராமநாதபுரம், செப்.10- இராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க இந்தியக் கடற்படை, மாதா அமிர்தானந்தமயி மடம் மற்றும் தமி ழக வனத்துறை ஆகியன இணைந்து கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதனொருபகுதியாக பருவமழைக் காலத்தில் மாவட்டத்தில் 3715 ஹெக்டேர் பரப்பளவில் ஐந்து லட்சம் விதைப் பந்து களை வான்வழியாகத் தூவ முடிவெடுக் கப்பட்டது. இதையடுத்து இந்தியக் கடற்படை அதி காரிகள் ஐஎன்எஸ் பருந்து நிலையத்தில் தூவும் நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் மடத்தின் அறங்காவலரும் பொரு ளாளருமான ராமகிருஷ்ணானந்த பூரி விதைப் பந்துகளைத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி ரியர் அட்மி ரல் ரவிக்குமார் திங்ராவிடம் வழங்கினார். தொடர்ந்து பருந்து கமாண்டிங் அதிகாரி அணித்தலைவர் விக்ராந்த் சப்னிஸ் தலை மையில் மாவட்டத்தில் ஐந்து லட்சம் விதை கள் தூவப்பட்டது. ரியர் அட்மிரல் திங்க்ரா ஊடகவியலா ளர்களிடம் கூறியதாவது: இந்தியக் கடற் படை சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் உறுதி யாக உள்ளது. பசுமை இயக்கத்துடன் இணைந்திருப்பதில் பெருமைகொள்கிறது. தமிழக வனத் துறையுடன் இணைந்து வான் வழி விதைப்புத் திட்டத்தை மேற்கொண் டுள்ளோம். இதன் மூலம் இயற்கையான வாழ்விடம் மேம்படுத்தப்படுவதோடு, இயற்கைத் தாவரங்கள் வளர்வதற்கும் உதவுமென்றார். மாநிலத்தில் இராமநாதபுரம் மாவட் டத்தின் இந்தப் பகுதியில் பருவமழை தொடங்குவதற்கு முன்பே விதைப்பந்து வீசு வது நடத்தப்படும். குறுகிய காலத்திற்குள் இதைச் செய்வதற்கு உறுதுணையாக இருந்த ஐஎன்எஸ் பருந்துவில் உள்ள தனது குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். வருவாய் மற்றும் வனத்துறை அதிகாரி கள் கூறுகையில், “இந்த இயக்கம் மாவட்டத் தில் பசுமை பரப்பை நிச்சயம் அதிகரிக்கும். இங்குள்ள கடற்படை நிலையத்தில் ஹெலி காப்டர்கள் மூலம் ஐந்து லட்சம் விதைப் பந்து களைத் தூவி பணிகளை முடிக்க முடிந்தது” என்றனர். உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 மில்லியன் ஹெக்டேர் காடுகள் அழிக்கப் படுகிறது. இது சுற்றுச்சூழல் அமைப்பின் நுட்பமான சமநிலை மற்றும் நமது கால நிலையின் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்தை விளைவிக்கிறது. விதைப் பந்துகளைப் பூமியில் தூவுவதன் மூலம் பல்லுயிர் பெருக் கம் நடைபெறுவதோடு நமது எதிர்கால மும் பாதுகாக்கப்படுகிறது என்றார் கிருஷ்ணானந்த பூரி. இராமநாதபுரம் மாவட்டத்திற்கு தெஸ்பி சியா பாபுல்னியா (பூவரசம்), காசியா ஃபிஸ்துலா (சரக்கொன்றை), அசாடிராக்டா இண்டிகா (வேம்பு), ஃபிகஸ் ரிலிஜியோசா (அரசமரம்) போன்ற பாரம்பரிய இனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.