districts

img

ஆட்சியர்களிடம் கட்டுமானத் தொழிலாளர்கள் மனு

மதுரை, ஜூன் 19-  கட்டுமானத் தொழிலாளர்கள் 60 வயது முடிந்து விண்ணப்பித்த நாள் முதல் ஓய்வூதியம் வழங்க  வேண்டும். பெண் தொழிலாளர் களுக்கு 55 வயது முதல் ஓய்வூதி யம் வழங்க வேண்டும். நலவாரி யத்தில் புதுப்பிக்கத் தவறிய 60  வயது பூர்த்தி அடைந்து தொழி லாளர்களுக்கு புதுப்பித்தலைக் காரணம் காட்டாமல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தீபாவளி சிறப்பு  நிதியாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.  கட்டட உரிமையாளர்கள், ஒப்  பந்ததாரர்கள் அல்லது பொறியா ளர்கள் பணியிடத்தில் விபத்தில் சிக்கும் தொழிலாளர்களுக்கு நிவா ரணமாக ரூ. 5 லட்சம் மற்றும் விபத்து மரணத்திற்கு ரூ.10 லட்சம் காப்பீடு  செய்வதை உறுதிப்படுத்த வேண்  டும் என வலியுறுத்தி கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு)  சார்பில் மதுரை, விருதுநகர், தேனி,  திண்டுக்கல், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மதுரை மாநகர் மாவட்டத் தலை வர் ராஜேந்திரன், மாவட்டப் பொதுச் செயலாளர் சி.சுப்பையா, துணைச் செயலாளர் அங்குசாமி, துணைத் தலைவர் உலகநாதன், புறநகர் மாவட்டத் தலைவர் வி. பிச்சைராஜன், பொதுச்செயலாளர் சி.மணிகிருஷ்ணன், மாவட்டப் பொருளாளர் ஜாஹிர் உசேன், சிஐடியு புறநகர் செயலாளர் கே. அரவிந்தன், தலைவர் செ.கண் ணன், பொருளாளர் கௌரி ஆகி யோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு  அளித்தனர். இராமநாதபுரம் இராமநாதபுரத்தில் சிஐடியு  மாநிலச் செயலாளர் தங்கமோகன், மாநிலத் துணைத் தலைவர் சிங்கா ரன், சிஐடியு மாவட்டச் செயலா ளர் எம்.சிவாஜி கட்டுமான சங்க  மாவட்டச் செயலாளர் எஸ்.ஏ.சந்த னம், மாவட்டத் தலைவர் ஆர் வாசு தேவன், அய்யாதுரை, மலைராஜ், சுடலைக்காசி, கட்டுமான சங்க இராமநாதபுரம் நகர் செயலாளர் முனீஸ்வரன், தொண்டி ராஜேந்தி ரன், செபஸ்டிராஸ், கணேசன் ஆகி யோர் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். விருதுநகர் விருதுநகரில் மாவட்டத் தலை வர் ஆர்.எம்.மாரியப்பன், மாவட்டச்  செயலாளர் பி.ராமர், சிஐடியு நிர்வா கிகள் எம்.சாராள், எம்.சி.பாண்டி யன், பிச்சைக்கனி உள்ளிட்டோர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனு வைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர்,  அதை தொழிலாளர் நலத்துறைக்கு பரிந்துரை செய்தார்.