districts

img

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொறியியல் பிரிவு பணியாளர்கள் போராட்டம்

மதுரை, அக்.5-  நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களை அரசு ஊழி யர்களாக அறிவித்து கரு வூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை தமிழ்  நாடு நகராட்சி மாநகராட்சி  அலுவலர்கள் மற்றும் பணி யாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஒரு நாள் தற்  செயல் விடுப்பு போராட்டம்  வியாழனன்று நடைபெற் றது.  போராட்டத்தில் மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 100 வார்டுகளில் பணி யாற்றும் பொறியியல் பிரிவு  பணியாளர் சங்க ஊழி யர்கள் பங்கேற்றனர். நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களை அரசு ஊழி யர்களாக அறிவித்து கருவூ லம் மூலம் ஊதியம் மற்றும்  ஓய்வூதியம் வழங்கிட வேண்  டும். பணியிட மாறுதல்களை பதவி உயர்வு மாறுதல் களை கலந்தாய்வு மூலம்  மேற்கொள்ளப்பட வேண்டும். அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்திட வேண்டும். எல்லை விரிவாக்க பணி யாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்  டும். அலுவலக நேரத்தில் ஆய்வு கூட்டங்களை நடத்திட வேண்டும். நக ராட்சி மாநகராட்சி ஊழி யர்களை பிற துறை பணி களை செய்ய வலியுறுத்து வதை கைவிட வேண்டும். நகர சுகாதார செவிலியர்கள் மாநகர சுகாதார செவிலி யர்களுக்கு பகுதி சுகாதார செவிலியர்களாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச  கோரிக்கைகள் வலியுறுத் தப்பட்டன.