2-வது நாளாக தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
திண்டுக்கல், செப்.13- திண்டுக்கல்லில் தொழில் அதிபர் ரத்தினம் வீட்டில் அம லாக்கத்துறையினர் 2-வது நாளாக சோதனையில் ஈடு பட்டனர். திண்டுக்கல்லில் அரசு நில அளவைத் துறையில் சர்வேயராக பணியாற்றி, ரியல் எஸ்டேட், கல்வி நிறுவ னங்கள் உள்ளிட்ட தொழில்கள் மூலம் தொழிலதிபர் ஆனவர் ரத்தினம். இவர் திமுகவில் ஆதரவாளர் ஆவார். இவரது மகன் திண்டுக்கல் மாமன்ற உறுப்பினராக உள்ளார். இந்நிலையில், ஜி.டி.என்.சாலையில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாயன்று காலை 9 மணி முதல் அம லாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர். மேலும் திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனி அருகேயுள்ள அனிபா நகரில் அவரது மைத்துனர் கே.ஆர்.கோவிந்த னின் வீட்டிலும் ரெய்டு நடைபெற்றது. இந்நிலையில், 2-ஆம் நாளாக புதனன்று சோதனை தொடர்ந்தது. தற்போது ரத்தினம் வெளியூரில் இருப்ப தாகவும், சோதனைகள் குறித்து அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ரத்தினம் வீடு முன்பு திரண்டு கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு நிலவியது. புதனன்று மாலையுடன் சோதனை நிறைவுற்றது. கிட்டத்தட்ட 31 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட தாக கூறப்படுகிறது.
லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி
நத்தம், செப்.13- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாணார்பட்டி- கூவனூத்துவில் தேங்காய் நார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு கோணப்பட்டியை சேர்ந்த நாகலட்சுமி (38) என்பவர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், தேங்காய் நார்களை ஏற்றிக்கொண்டு, லாரி ஒன்று புறப்பட்டபோது, எதிர்பாராத விதமாக லாரி யின் பின்னால் நின்று கொண்டிருந்த நாகலட்சுமி மீது லாரி யின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் நாகலெட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சாணார் பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமலையில் குடிநீரின்றி தவிக்கும் பளியர் குடியிருப்பு
திண்டுக்கல், செப்.13- திண்டுக்கல் சிறுமலையில் உள்ள பளியர் குடியிருப்பு களுக்கு போதிய குடிநீர் வசதியில்லாததால் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். சிறுமலையில் தென்மலை மற்றும் கருப்புக்கோவில் இடையில் பளியர் சமூக மக்களுக்கு குடியிருப்பு கட்டித் தரப்பட்டுள்ளது. இங்கு அரசு முறையான தண்ணீர் வசதி செய்து தரவில்லை. இந்நிலையில், இங்கு வசிக்கும் பளியர் இனப் பெண்கள் பழப்பண்ணை அருகேயுள்ள வனத்துறைக்கு சொந்தமான பூங்காவிற்கு 2 கி.மீ தூரம் வரை மலை யில் உள்ள மேடு பள்ளங்களில் நடந்து சென்று குடங்களில் தண்ணீர் சுமந்து வருகின்றனர். இது தொடர்பாக அரசு அதி காரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பளியர் மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
தேனியில் யானை தந்தங்களுடன் 2 பேர் கைது
தேனி, செப்.13- கேரளாவில் இருந்து விற்பனை செய்வதற்காக யானை தந்தங்களை கொண்டு வந்த 2 பேரை தேனியில் வனத்துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து குமுளி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆதி சுஞ்சனகிரி கல்லூரி அருகே யானை தந்தங்களை விற்பனை செய்வதாக கம்பம் மேற்கு வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து வனச்சரகர் ஸ்டாலின் தலைமை யில் வனத்துறையினர் அந்தப் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த மூன்று பேர் வனத்துறை யினரைப் பார்த்ததும் சாக்குப் பையை கீழே போட்டு விட்டு ஓடினர். அவர்களை விரட்டிச் சென்ற வனத்துறை யினர் இரண்டு பேரை பிடித்தனர். கேரள மாநிலம் கடைசி கடவு பகுதியைச் சேர்ந்த முகேஷ் கண்ணன், பிரகாஷ் ஆகிய இருவரும் கேரளாவில் இருந்து யானைத் தந்தங்களை தமிழகத்தில் விற்பனை செய்வதற்காக கூட லூரைச் சேர்ந்த சுரேஷ் கண்ணன் என்பவருடன் வந்தி ருந்தது தெரியவந்துள்ளது.மூன்று யானை தந்தங்கள் வெள்ளி காப்புகளின் மூலம் அலங்கரிக்கப்பட்டிருந்தன. முகேஷ் கண்ணன், சுரேஷ் கண்ணன் ஆகிய இரு வரையும் வனத்துறையினர் கைது செய்தனர். தப்பி ஓடிய பிரகாஷ் என்பவரையும் யானை தந்தங்கள் விற்பனைக்கு உடந்தையாக இருப்பவர்களையும் தேடி வருகின்றனர்.
சிறுமலையில் தொடர் மின் வெட்டு: பொதுமக்கள் அவதி
திண்டுக்கல், செப்.13- திண்டுக்கல் சிறுமலையில் கடந்த 2 மாதமாக தொடர் மின் வெட்டு காரணமாக பொதுமக்கள் பெரும் சிர மங்களை சந்தித்து வருகின்றனர். திண்டுக்கல் சிறுமலையில் அண்ணா நகர், பழை யூர், கடமான்குளம், புதூர், அகஸ்தியர் புரம், தாழைக் கடை, வேளாண் பண்ணை, தென்மலை, கருப்பு கோவில் பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் தொடர்ந்து இரவு 11 மணிக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு மின்சாரம் வழங்கப்படுவதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கடந்த 2 மாதமாக இதே நிலை நீடித்து வருகிறது. இது தொடர்பாக பொதுமக்கள் கேட்டால், மின் வயர்களில் குச்சி விழுந்து விடுவதாகவும், வெளவால் விழுவதாகவும் மின்சார வாரியத்தினர் காரணம் கூறுகின்றனர். பொன்னகரம் மின் வாரிய அதிகாரிகளை தொடர்பு கேட்ட போது, சிறுமலைக்கு மின் துண்டிப்பு இன்றி மின்சா ரம் வழங்கப்படுவதாக தெரிவித்தனர். ஆனால் அதி காரிகள் கூறுவதை சிறுமலை மக்கள் மறுக்கின்றனர்.
அந்தியோதயா ரயில் சாத்தூரில் நின்று செல்லும்
மதுரை, செப்.13- மதுரை கோட்ட பகுதியில் பயணி களின் வசதிக்காக பல்வேறு ரயில்களுக்கு புதிய நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி தாம்பரம் - நாகர்கோவில் - தாம் பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20691/ 20692) சாத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். நாகர்கோவில் செல்லும் அந்தியோ தயா ரயில் மற்றும் தாம்பரம் செல்லும் அந்தி யோதயா ரயில் ஆகியவை முறையே காலை 9.32 மணிக்கும் மாலை 6.18 மணிக்கும் சாத்தூரில் இருந்து புறப்படும். இதே போல மதுரை - புனலூர் - மதுரை ரயில்கள் (16729/16730) சாத்தூர், கோவில்பட்டி ரயில் நிலையங்களில் கூடு தலாக நின்று செல்லும். இதன்படி புனலூர் செல்லும் ரயில் சாத்தூர், கோவில்பட்டி ரயில் நிலையங்களில் இருந்து முறையே அதிகாலை 12.30, 12.48 மணிக்கு புறப்படும். மதுரை செல்லும் ரயில் இந்த ரயில் நிலை யங்களிலிருந்து முறையே அதிகாலை 1.22, 1.40 மணிக்கு புறப்படும். மேலும் திருச்சி - இராமநாதபுரம் - திருச்சி ரயில்கள் (16849/16850) கீரனூர் ரயில் நிலை யத்திலும் கூடுதலாக நின்று செல்லும். இராமநாதபுரம் செல்லும் ரயில் காலை 7.28 மணிக்கும் திருச்சி செல்லும் ரயில் இரவு 7.01 மணிக்கும் கீரனூர் ரயில் நிலை யத்திலிருந்து புறப்படும். இந்த கூடுதல் நிறுத்தங்கள் செப்டம்பர் 20 முதல் அம லுக்கு வருகிறது. மண்டபம் - அஜ்மீர் - மண்டபம் ஹம்சபார் விரைவு ரயில்கள் (20973/20974) புதுக் கோட்டை, இராமநாதபுரம் ரயில் நிலை யங்களில் கூடுதலாக நின்று செல்லும். செப்டம்பர் 23 முதல் மண்டபம் செல்லும் ரயில் புதுக்கோட்டை, ராமநாதபுரம் ரயில் நிலையங்களில் இருந்து முறையே மாலை 4.00, 6.45 மணிக்கு புறப்படும். செப்டம்பர் 26 முதல் அஜ்மீர் செல்லும் ரயில் இராமநாதபுரம், புதுக்கோட்டை ரயில் நிலையங்களில் இருந்து முறையே இரவு 11.45 மணிக்கும் அதிகாலை 1.50 மணிக்கும் புறப்படும். மேலும் மண்டபம் - அயோத்தியா - மண்டபம் ஷிரத்தா சேது எக்ஸ்பிரஸ் ரயில்கள் இராமநாதபுரம், காரைக்குடி ரயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும். செப்டம்பர் 24 முதல் அயோத்தியா செல்லும் ரயில் இராமநாதபுரம், காரைக் குடி ரயில் நிலையங்களில் இருந்து முறையே நள்ளிரவு 12.50 மணிக்கும் அதிகாலை 3 மணிக்கும் புறப்படும். செப்டம்பர் 20 முதல் மண்டபம் செல்லும் ரயில் காரைக்குடி, இராமநாதபுரம் ரயில் நிலையங்களில் இருந்து இரவு 11.10 மணிக் கும் அதிகாலை 1.25 மணிக்கும் புறப்படும்.
கானாடுகாத்தான் பேரூராட்சியில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை, செப்.13- 2 ஆண்டுகளாக செயல் படாமல் நின்று கொண்டி ருக்கும் வாகனங்களை பழுது நீக்கியதாக கூறியும், தடுப்பணைகளை சரி செய்து மேம்படுத்தியதாக பணம் கையாடல் என பல ஊழல் முறைகேடுகள் செய்து வரும் கானாடு காத்தான் பேரூராட்சி நிர்வா கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கானாடுகாத்தானில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் அழ கர்சாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் (பொ) கருப்புசாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சேதுராமன், வெங்கட், தெட்சிணாமூர்த்தி, வெங்க டேசன் சுப்பிரமணி, குமார், விவசாயிகள் சங்க திருமயம் தாலுகா பொறுப்பாளர் வீர மணி, பத்னாபன் ஆகியோர் பேசினர்.
கோவில்களில் பயிற்சி அர்ச்சகர் நியமனத்துக்கு எதிரான வழக்கு
இன்று விரிவான விசாரணை
மதுரை, செப்.13- அனைத்து சாதியினரும் அர்ச்சகராக லாம் என்ற திட்டத்தின் கீழ் கோவில்களில் பயிற்சி அர்ச்சகர்களை நியமனம் செய்ய தடை விதிக்க கோரிய வழக்கின் விசார ணையை வியாழக்கிழமைக்கு (இன்று) ஒத்தி வைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த வீரபாகு மற்றும் ஹரிஹர சுப்பிரமணி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தனர். மனுவில், ‘‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின் மூலம் தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும் அர்ச்சகர் நியமனம் செய்ய பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தின்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற பயிற்சி திட்டத்தின்கீழ் பயிற்சி முடித்தவர்களை மூத்த அர்ச்சகர்கள் கீழ் பயிற்சி அர்ச்சக ராக நியமனம் செய்ய தமிழக அரசு அர சாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் ஆகம, வேத விதிகளை முழுமையாக படித்தவர்கள் ஏரா ளமாக உள்ளனர். இதற்கிடையே புதிதாக நியமனம் என்பது தேவையற்றது. மேலும் அரசின் ஒரு வருட பயிற்சியில் எந்த வேதத் தையும் முழுமையாக கற்க முடியாது. வேதங்களை கற்பதற்கு ஐந்து, ஆறு வருடங்கள் ஆகும். மேலும் மூத்த அர்ச்சகர் கீழ் பயிற்சி அர்ச்சகராக நியமனம் செய்யக்கூடிய நபர்களுக்கு கோவில் நிதி யிலிருந்து ரூ.8 ஆயிரம் மாத ஊதியம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கத் தக்கதல்ல. எனவே தமிழ்நாடு அரசின் இந்த அரசாணையை ரத்து செய்து உத்தர விட வேண்டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு புதனன்று நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறி ஞர், ‘‘தமிழ்நாடு அரசாணை சட்டவிரோத மானது. மேலும் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கொடுத்துள்ள உறுதி மொழிக்கு எதிராக உள்ளது. எனவே இதை ரத்து செய்ய வேண்டும். வழக்கு முடியும் முன்பாக விசாரணை நடைபெறும் காலங்க ளில் இந்த அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்’’ என்றார். தமிழ்நாடு அரசு தரப்பில் அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகநாதன், கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிர வன் ஆஜராகி, ‘‘இந்த வழக்கு விசார ணைக்கு உகந்தது அல்ல; அர்ச்சகர் பயிற்சி என்பது பயிற்சி பெற்ற அர்ச்ச கர்களுக்கு அனுபவ பயிற்சிதான். இது தொடர்பான விரிவான விசாரணையை செப்.25 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும்’’ என்றனர். இதற்கு மனுதாரர் தரப்பு 25-ம் தேதிக் குள் இந்த அரசாணை அமல்படுத்தும் வேலையை அரசு நிறைவேற்றி விடும் என்ப தால் அரசு தரப்பு கோரிக்கையை ஏற்கக் கூடாது என தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணையை வியாழனன்று (செப்.14) ஒத்திவைக்க வேண்டும் என அரசு தரப்பில் கோரப் பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை வியாழக்கிழமைக்கு (இன்று) ஒத்தி வைத்தார்.
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
இராமநாதபுரம், செப்.13- கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு தமிழக அரசின் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையின் சார்பில் இராமநாத புரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊரக வாழ்வா தார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து இராமநாத புரம் இன்பஃண்ட் ஜீசஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் செப்டம்பர் 16 அன்று நடைபெற உள்ளது. முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை வகிக்கிறார். காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் முகாமில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை நாடுநர்களை தெரிவு செய்ய இருக்கின்றன. 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை படித்த வர்களும், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் பட்டதாரி களும், முதுகலை, இளங்கலை பட்டதாரி ஆசிரியர்கள், செவிலியர் மற்றும் லேப் டெக்னீசியன் கல்வித் தகுதி யுடையவர்களும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் இராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது rmdjobfair01@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, 04567-230160 என்ற தொலை பேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. எனவே, வேலை நாடுநர்கள் தங்களது முழு பயோடேட்டா, அனைத்து அசல் கல்விச் சான்றுகள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம்.
குழந்தைகளை காக்க வைத்த பாஜகவினர்
சின்னாளப்பட்டி, செப்.13- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சின்னா ளப்பட்டியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை யின் என் மண் என் மக்கள் நடைபயணம் புதனன்று நடை பெற்றது. இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பிருந்தே சின்னாளப்பட்டி பகுதியில் பாதைகளை மறித்து பாஜக வினர் பிளக்ஸ் பேனர் வைத்து போக்குவரத்திற்கு இடை யூறு ஏற்படுத்தினர். இந்நிலையில், அண்ணாமலை வருகையையொட்டி மதுரை-திண்டுக்கல் சாலையை மறித்து நடனம் ஆடிக் கொண்டிருந்ததால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகினர். மேலும் பொதுக்கூட்டத்திற்கு பள்ளி குழந்தைகளை அழைத்து வந்து வெகு நேரமாக காத்திருக்க வைத்த சம்பவங்களும் அரங்கேறின.
கைத்தறி நூல் ரகங்களை விசைத்தறியில் நெய்தவர் மீது வழக்கு
அருப்புக்கோட்டை, செப்.13- அருப்புக்கோட்டை நகர் பகுதியில் கைத்தறி நெச வுக்கு ஒதுக்கப்பட்ட பருத்தி நூல் ரகங்களை விசைத்தறி யில் இயக்குவதாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. இதையடுத்து, கைத்தறி உற்பத்தி ரக ஒதுக்கீடு உதவி அமலாக்க அலுவலர் வரதராஜன் தலைமை யிலான அதிகாரிகள் வெள்ளக்கோட்டை, சொக்கலிங்க புரம், புளியம்பட்டி, திருநகரம் நெசவாளர் காலனி பகுதி களில் புதனன்று ஆய்வு செய்தனர். அதில், நெசவாளர் காலனியைச் சேர்ந்த ராஜேந்தி ரன் என்பவர் வீட்டில் கைத்தறி நெசவுக்கு ஒதுக்கிய பருத்தி நூல் சேலைகளை விசைத்தறியில் இயக்கியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ரக ஒதுக்கீடு சட்டம் 1985-ன் படி அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
3 பெண்கள் உட்பட 4 பேர் தற்கொலை முயற்சி
திண்டுக்கல், செப்.13- திண்டுக்கல் மாவட்டத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக ஒரேநாளில் 3 பெண்கள் உட்பட நான்கு பேர் விஷத்தை குடித்து தற்கொலை முயன்றுள்ளனர். கன்னிவாடி மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்பவரது மனைவி அன்பு பிரியதர்ஷினி (25), குடும்ப பிரச்சனை காரணமாக கழிப்பறை சுத்தம் செய்யும் ஹார்ப்பிக்கை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதேபோல், திண்டுக்கல் தென்னம்பட்டியை அடுத்துள்ள கள்ளுக்குளம் பகுதியைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவரது மனைவி அபிநயா (24), குடும்ப பிரச்சனை காரணமாக அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். திண்டுக்கல் செம்பட்டி அருகேயுள்ள லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவரது மனைவி போதுமணி (50), குடும்ப பிரச்சனை காரணமாக எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். நத்தம் அருகே உள்ள ஊராளிபட்டியைச் சேர்ந்த உலகநாதன் என்பவரது மகன் பாலமுருகன் (35). தாள் திட்டியதால் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவர்கள் அனைவரும் திண்டுக்கல் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும் போது. குடும்ப பிரச்சனை தொடர்பாக பெண்கள் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவத்தையொட்டி பெண்களுக்கு கவுன் சிலிங் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
அணைகளில் நீர்மட்டம்
முல்லைப்பெரியாறு - நீர்மட்டம் 119.30 அடி. வரத்து 312 கன அடி. திறப்பு 511 கன அடி. வைகை அணை - நீர்மட்டம் 47.18 அடி. வரத்து 100 கன அடி. திறப்பு 69 கன அடி. மஞ்சளாறு அணை - நீர்மட்டம் 50.10அடி. வரத்து, திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணை - நீர்மட்டம் 78.49 அடி. வரத்து இல்லை. திறப்பு 3 கன அடி. சண்முகாநதி அணை - நீர்மட்டம் 34.50. வரத்து, திறப்பு இல்லை.
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு நவம்பருக்குள் வழக்கு விசாரணை நிறைவடையும்: உயர்நீதிமன்றத்தில் சிபிஐ பதில்
மதுரை, செப்.13- தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் ஜெய ராஜ் - பென்னிக்கிஸ் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 19 அன்று காவல்துறை விசார ணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர்கள் முருகன், சாமிதுரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து ஆகியோரை சிபிஐ காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை முதலாவது நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீதர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், உடல் நலக்குறைவு காரணமாக சிரமப்பட்டு வருவதாகவும், தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும். எனவே தனக்கு பிணை வழங்கி உத்தர விட வேண்டும்’’ எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு புதனன்று நீதிபதி இளங்கோ வன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. விசாரணை தற்போது வேகமாக நடை பெறும் நிலையில் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்கு வது வழக்கு விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் நவம்பர் மாதத்திற்குள் வழக்கு விசாரணை நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் உயிரிழந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி தரப்பில், ஆய்வாளர் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரி விக்கப்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பு பணி தனியார்மயம் ஆட்டோ தொழிலாளர்கள் பாதிப்பு
மதுரை, செப்.13- மதுரையில் உள்ள வட்டார போக்கு வரத்து அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளை தனியா ருக்கு வழங்குவதால் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டு, ஆட்டோ தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சிஐடியு மதுரை மாநகர் ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.தெய்வராஜ், பொதுச்செய லாளர் எம்.கனகவேல் ஆகியோர் விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரையில் 3 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்களில் ஆன்லைன் மூல மாக பெயர் மாற்றம், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், தவணை கொள்முதல் ரத்து செய்தல், பெர்மிட் புதுப்பித்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், பணிகளை தனி யாருக்கு வழங்கும் வகையில் (FACE LESS) மூலம் அனைத்திலும் ஆதார் இணைக்க வேண்டுமென பல்வேறு நிபந்தனைகளை விதித்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பெர்மிட் காலம் முடிவுக்கு முன்னதாக பெர்மிட் புதுப்பித்தல் நடைபெற முடியாத நிலையில், பெர்மிட் காலாவதி ஆகும் சூழ்நிலையில், ஆட்டோ உள்ளிட்ட மோட்டார் வாகன தொழிலாளர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் பெர்மிட் இல்லாத நிலையில் பெர்மிட் ஒன்றுக்கு ரூ.1,60,000 கொடுத்து பெர்மிட் பெற வேண்டிய நிலையில், ஆர்டிஓ அலுவலகங்களின் பணி நிறுத்தம் காரணமாக ஆட்டோ தொழிலை விட்டே தொழிலாளர்கள் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தொழிலாளிகளுக்கு பாதக மில்லாமல் மாற்று ஏற்பாடுகளை செய்யும் வரை தற்போதைய நிலையை தொடர வேண்டும். தமிழக அரசும், போக்குவரத்து இணை ஆணையாளரும், மாவட்ட ஆட்சிய ரும் உடனடியாக இந்த விவகாரத்தில் தலை யிட்டு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.