நாளை இராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு முகாம்
இராமநாதபுரம், ஆக.10- தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் வேலைநாடு நர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி முற்றிலும் இலவசமாக தமிழக அரசால் தமிழ்நாடு தனியார்துறை வேலை இணை யம் “Tamil Nadu Private Job Portal” (www.tnprivate jobs.tn.gov.in என்ற இணையதள சேவை வழங்கப்படு கிறது. இவ்விணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலை நாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்கள் தங்களின் சுய விபரங்களடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் ஆகஸ்ட் 12 அன்று காலை 10 மணிக்கு இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்துகொள்ளவும், இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுவதினால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது எனவும் அரசுத் துறைகளில் கோரப்படும் பணி யிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படுமெனவும் இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் செ.மதுக்குமார் தெரிவித் துள்ளார்.
பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறப்பு குறைப்பு
தேனி, ஆக.10- நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந் ததை தொடர்ந்து கேரளாவிற்கு வெளி யேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது . நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்த தால் முல்லைப் பெரியாறு அணைக்கு தொடர் நீர்வரத்து காரணமாக நீர்மட்டம் கடந்த 8 ஆம் தேதி 139 அடியாக உயர்ந் தது. ரூல்கர்வ் முறைப்படி நீர்மட்டத்தை உயர்த்த முடியாது என்பதால் கேர ளப்பகுதிக்கு 7ஆயிரத்து 246கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இருப்பினும் நீர்வரத்து அதிக ரித்துக் கொண்டே இருந்ததால் செவ் வாய்க்கிழமை நீர்வெளியேற்றம் 10 ஆயிரத்து 400கனஅடியாக உயர்த் தப்பட்டது. இந்நிலையில் பெரியாறு அணையில் 69.2மிமீ, அளவு பெய்த மழை புதன்கிழமை 28.8மிமீ.ஆக குறைந்தது. இதனால் விநாடிக்கு 10 ஆயிரத்து 552கனஅடியாக இருந்த நீர்வரத்து புதன்கிழமை 6 ஆயிரத்து 957கனஅடி யாக குறைந்தது. இதனைத் தொடர்ந்து கேரளா பகுதிக்கான நீர்வெளியேற்றம் 8 ஆயி ரத்து 263 கனஅடியாக குறைக்கப் பட்டது. தமிழகப் பகுதிக்கு தற்போது 2 ஆயிரத்து 194 கனஅடிநீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. நீர் மட்டம் 138.90 அடியாக உள்ளது. ரூல்கர்வ் முறைப்படி ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை 138.40அடி உயரம் அள விற்கே நீர்மட்டத்தை நிலை நிறுத்த முடியும். வைகை அணையின் நீர்மட்டம் 69.32 அடியாக உள்ளது. 2701 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து 3969 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 46 கனஅடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.41 அடி யாக உள்ளது. 84 கனஅடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் குடிநீருக்காகவும், மற் றவை உபரியாகவும் திறக்கப்படுகிறது. மழையளவு உத்தமபாளையம் 2.3, கூடலூர் 2.5, தேக்கடி 5.4, பெரியாறு 28.8 மி.மீ மழை யளவு பதிவாகி உள்ளது.
நத்தம் அருகே கார்-பைக் மோதல்: 2 பேர் பலி
நத்தம், ஆக.10- சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அணைக் கரைப்பட்டியை சேர்ந்தவர்கள் சந்தன அழகர்(52), ராஜ்குமார் (35), மணல்மேட்டுபட்டியை சேர்ந்தவர் பிரசாந்த்(32). இவர்கள் மூவரும் இரு சக்கர வாகனத்தில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோபால்பட்டி அருகே கன்னியாபுரம் பகுதியில் நடைபெறும் மீன்பிடி திருவிழாவில் கலந்து கொள்ள சென்றுள்ளனர். அப்போது ஒத்தக்கடை- நடுப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திண்டுக்கல்லில் இருந்து நத்தம் நோக்கி வந்த கார் இவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த சந்தனஅழகர், ராஜ்குமார் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.காயங்களு டன் பிரசாந்த் நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார் இறந்தவர்களின் சடலங்களை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து சாணார்பட்டி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைக்கில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி
வேடசந்தூர், ஆக.10- திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள சுள்ளெறும்பு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி முருகன் (வயது57) .இவர் கடந்த வாரம் தனது தோட்டத்திற்கு செல்வதற்காக பைக்கில் புறப்பட்டார். சுள்ளெறும்பில் வேடசந்தூர் சாலையில் ஒரு தனியார் நூட்பாலை முன்பு வந்துகொண்டிருந்தபோது கட்டுப் பாட்டை இழந்த பைக்கில் இருந்து முருகன் தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கம் இருந்தவர்கள் முருகனை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு சேர்க்கப் பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓணம் பண்டிகைக்கு சிறப்பு ரயில் இயக்கம்
திண்டுக்கல், ஆக.10- ஓணம் பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவில் வரை சிறப்பு ரயில் இயக்க உள்ளது. ஆகஸ்ட் 12 திங்களன்று சென்னையிலிருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.55 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது. இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், நெல்லை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரையில் மருந்தாளுநர்கள் ஆர்ப்பாட்டம்
மதுரை, ஆக.10- மருந்தாளுநர்களின் கட்டாய பணியிட மாறுதல் கலந்தாய்வு உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் மதுரை மாநகர் புறநகர் மாவட்டம் சார்பில் செவ்வாயன்று துணை இயக்கு நர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புறநகர் மாவட்ட தலைவர். த. சோமசேகர் தலைமை வகித்தார். புறநகர் மாவட்ட செயலாளர் தமிழ்ச் செல்வி, மாநகர் மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். முன்னாள் மாநில பொதுச் செயலாளர் அ.பாலமுருகன் சிறப்புறையாற்றி னார், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் க. நீதிராஜா ஆதரித்துப் பேசினார், மாநிலச் செயலாளர் ஆனந்த வள்ளி நிறைவுரையாற்றினார்.
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது
அருப்புக்கோட்டை, ஆக.10- அருப்புக்கோட்டை அருகே 17 வயதுச் சிறுமிக்கு பாலி யல் தொந்தரவு கொடுத்தவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். அருப்புக்கோட்டை அருகே வாழ்வாங்கி கிரா மத்தைச்சேர்ந்த கிருஷ்ணன் மகன் சுப்பிரமணி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் அந்த மாணவியை மிரட்டியுள்ளார். எனவே, அச்சிறுமியின் தாய், அனைத்து மகளிர் காவல்நிலை யத்தில் புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடத்தி போலீசார், சுப்பிரமணியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
விருதுநகரில் மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை
விருதுநகர், ஆக.10- விருதுநகரில் உள்ள விக்னேஷ் காலனியைச் சேர்ந்த வர் ஆனந்தராஜ்(21). அக்ரஹாரம் தெருவில் மருத்துவ மனை மற்றும் மருந்துக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் லோகேஷ்(21). இவர் ரஷ்யா அருகே உள்ள கிர்கிஸ்தான் நாட்டில் மருத்துவக் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுமுறை நாட்கள் என்பதால் விருதுநக ருக்கு வந்துள்ளார். இந்நிலையில், லோகேஷூக்கு ஆகஸ்ட் 11 அன்று பிறந்த தினமாகும். இதை வெகு விமர்சையாக கொண்டாட வேண்டும் என அவர் தனது பெற்றோரிடம் தெரிவித்தாராம். அதற்கு பெற்றோர்கள் சம்மதிக்கவில்லையென கூறப்படுகிறது. இதனால், மன முடைந்த லோகேஷ், தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். இதையடுத்து, மயக்கமடைந்த அவரை, பெற்றோர், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள், லோகேசுக்கு முதலுதவி சிகிச்சையளித்தனர். பின்பு, மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், புதனன்று அதி காலை சிகிச்சை பலனின்றி லோகேஷ் உயிரிழந்தார். இதுகுறித்து விருதுநகர் மேற்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
எரியோட்டில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
வேடசந்தூர், ஆக.10- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோட்டில் காவல் துறை சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் புதனன்று தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பி ரண்டு துர்காதேவி தலைமை ஏற்று விளக்கிப் பேசினார். எரியோடு பேரூராட்சி தலைவர் முத்துலட்சுமி கார்த்திகே யன், துணைத்தலைவர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்துப்பேசினார்கள். எரியோடு காவல் ஆய்வாளர் சத்தியபிரபா வரவேற்றுப்பேசினார். கூட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வட்டார மருத்துவ அலுவலர் பொன்மகேஸ்வரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் பெரியசாமி, திமுக நகர செயலாளர் செந்தில்குமார் மற்றும் அனைத்துக் கட்சி நிர்வாகிகள், வர்த்தகர்கள் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அனைத்துக் கட்சி பிரமுகர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்ற போதைப் பொருள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
ஊராட்சி தலைவரை சாதியைச் சொல்லி மிரட்டிய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுத்திடுக!
தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்
தேனி, ஆக.10- க.மயிலாடும்பாறை ஒன் றியம் ஆத்தாங்கரைப்பட்டி ஊராட்சி தலைவர் பழனி சாமியை சாதியை சொல்லி இழிவாக பேசி கொலை மிரட்டல் விடுத்த ஒப்பந்த தாரர் வினோத்குமார் மீது தாழ்த்தப்பட்டோர் வன் கொடுமை தடுப்புச் சட்டத் தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி வலியுறுத்தியுள்ளது . இது குறித்து அமைப்பின் மாவட்டத் தலைவர் டி.கே. சீனிவாசன் , மாவட்டச் செய லாளர் இ.தர்மர் ஆகியோர் தேனி ஆட்சியருக்கு அனுப்பி யுள்ள புகாரில் தெரிவித்துள் ளதாவது: கடந்த ஆண்டு விடுதலை நாள் மற்றும் குடியரசு நாள் விழாக்களில் பட்டியல் சமூ கம் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த கிராம ஊராட்சி தலை வர்களை தேசியக் கொடி யை ஏற்ற விடாமல் தடுக்கப் பட்ட நிகழ்வுகள் தமிழகத்தில் பல இடங்களில் நடந்துள் ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. எனவே, தேனி மாவட்டத்தில் உள்ள பட்டி யல் இனத்தைச் சேர்ந்த கிராம ஊராட்சித் தலைவர் கள், பேரூராட்சி மன்ற தலை வர்கள் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று அலுவலகங்க ளில் தேசிய கொடி ஏற்று வதை உறுதிப்படுத்திட, காவல்துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சி உள் ளாட்சி துறைகளுக்கு சுற்ற றிக்கை மூலம் உத்தரவிட வேண்டும். அரசியல் சாசனம் வழங்கி யிருக்கும் அடிப்படை உரி மையை மறுக்கும் நபர்கள் மற்றும் அதிகாரிகள் மீது உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மயிலாடும்பாறை ஊரா ட்சி ஒன்றியம், ஆத்தாங்க ரைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சி.பழனிச்சாமி அவர்களை சாதியை சொல்லி திட்டிய அரசு ஒப்பந்ததாரர் வினோத்குமார் மீது தாழ்த் தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரி வித்துள்ளனர்.
ஒவ்வொரு வரியினத்திற்கும் ஒவ்வொரு ரசீது அப்டேட் ஆகாத விருதுநகர் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் நிதி-வருவாய் இழப்பு
விருதுநகர், ஆக.10- விருதுநகர் நகராட்சியில் ஒவ் வொரு வரியினத்திற்கும் தனித் தனி யாக ரசீது தற்போது வரை போடப் பட்டு வருகிறது. இதன் காரணமாக நகராட்சிக்கு நிதி மற்றும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. நூற்றாண்டு விழாவை கொண் டாடி முடித்த பாரம்பரியமான நக ராட்சிகளில் விருதுநகரும் ஒன்றா கும். முன்னாள் முதலமைச்சர் காம ராஜர் தலைவராக இந்த நகராட்சியில் மக்கள் பணியாற்றியுள்ளார் என்ற பெருமையும் உண்டு. தற்போது விருதுநகர் நகராட்சி யில் சுமார் 26 ஆயிரம் வீடுகள் உள் ளன. இதில் சுமார் 15 ஆயிரம் குடி யிருப்புகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகளும், சுமார் 7 ஆயிரம் வீடுகளுக்கு பாதாளச் சாக்கடை இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஒவ்வொரு வீட்டிற்கும், சொத்துவரி, குடிநீர் கட்ட ணம், குப்பை வரி மற்றும் பாதாளச் சாக்கடை கட்டணங்கள் தனித் தனியே வசூலிக்கப்பட்டு வருகிறது. இதை மாற்றியமைக்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே நகராட்சி நிர்வாக இயக்குநர் அலு வலகத்திலிருந்து கடிதம் வந்துள் ளது. அதாவது, சொத்துவரி, குடிநீர் கட்டணம், குப்பை வரி மற்றும் பாதா ளச் சாக்கடை கட்டணம் என அனைத் திற்கும் ஒரே எண் கொண்ட ஒருங்கி ணைக்கப்பட்ட ரசீதில் பொது மக்களி டம் பணத்தை வசூலிக்க வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள் ளது. இதனால், பொது மக்கள் நக ராட்சி அலுவலகத்தில் வரிவசூல் மையத்தில் உள்ள அனைத்து அலு வலரிடமும் பணத்தை செலுத்தலாம். ஆனால், விருதுநகர் நகராட்சி யில் தற்போது வரை அந்த நடை முறையை அதிகாரிகள் பின்பற்ற வில்லை. அத்திட்டத்தை அமல் படுத்தவும் இல்லை. இதன் காரண மாக ஒவ்வொரு வரியினத்திற்கும் ஒவ்வொரு வகையான ரசீதுகள் அச்ச டிக்கப்படுகின்றன. இதனால், நக ராட்சிக்கு மிகப்பெரிய அளவில் நிதி இழப்பு ஏற்படுகிறது. மேலும், பொது மக்களும், சொத்து வரி மற்றும் குப்பை வரிகளை மட்டும் பாக்கியின்றி செலுத் தும் நிலை உள்ளது. குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை கட்டணங்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் பெரும் சுமையாக மாறி வருகின்றன. பொது மக்களிடம் ஒரே நேரத்தில் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என நகராட்சி அதிகாரி கள் தெரிவிக்கின்றனர். ஆனால், பணம் இல்லாத காரணத்தால், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை கட்ட ணங்களை பொது மக்கள் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக, நகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்பட்டு வருகிறது. அதேவேளை, தமிழகத்தில் உள்ள ஏராளமான நகராட்சிகளில் ஒரே ரசீது மூலம் அனைத்து வரி யினங்களையும் செலுத்தும் நடை முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், நூற்றாண்டு விழா கண்ட விருதுநகர் நகராட்சியில் மட்டும் இந்த நடைமுறையை அதிகாரிகள் அமல்படுத்த மறுத்து வருகின்றனர். எனவே, தமிழக அரசு மற்றும் நகராட்சி நிர்வாகம்- குடிநீர் வழங்கல் துறை, விருதுநகர் நகராட்சியில் உட னடியாக அனைத்து வரியினங்களை யும் ஒரே ரசீது மூலும் செலுத்தும் முறையை அமல்படுத்த வேண்டு மென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீட்டு வசதி சங்க பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க சிஐடியு வலியுறுத்தல்
விருதுநகர், ஆக.10- தமிழகத்தில் கலைக்கப்பட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் பணி புரிந்தவர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டுமென சிஐடியு வலியுறுத்தி யுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி கூட்டுறவு சங்க ஒருங்கிணைப்புக்குழு (- சிஐடியு) கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. மாநில கன்வீனர் கே. போஸ் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.அசோகன் சிறப்புரையாற்றினார். மேலும் இதில் நிர்வாகிகள் பி.நாகராஜன், நாரா யணசாமி, சேகர், வரதராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். முடிவில், தமிழகத்தில் கலைக்கப்பட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் பணிபுரிந்தவர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும். காலிப்பணி யிடங்களை பட்டியலிட வேண்டும். பல மாதங்களாக வழங்காமல் உள்ள நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.