திருவில்லிபுத்தூர், பிப்.24- தமிழ்நாடு மின்சாரத் தொழிலாளர் சம்மேளனம் 65-ஆவது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு புதனன்று திரு வில்லிபுத்தூர் கோட்டைப்பட்டி செயற் பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய தொழிலாளர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மின்வாரிய சம் மேளன ஆதிமூலம் தலைமை வகித்தார். திட்ட செயலாளர் ஆவுயப்பன், திட்ட இணைச் செயலாளர்கள் தாமஸ், தங்க முடி ஆகியோர் விளக்கிப் பேசினர். கோட்ட செயலாளர் வைரமுத்து நன்றி கூறினார். கேங்க்மேன் ஊழியர்களுக்கு பயிற்சி காலத்தைக் குறைத்து காலமுறை ஊதி யம் வழங்க வேண்டும், கேங்மேன் பணி யாளர்களுக்கு அவர்கள் சொந்த மாவட்டத் தில் பணியாற்ற மாறுதல் உத்தரவு வழங்க வேண்டும், அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர் களையும் நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.