திருவில்லிபுத்தூர், ஏப்.12- திருவில்லிபுத்தூர் நகர்மன்றத்தின் முதல் கூட்டம் கூட்ட அரங்கில் நகர்மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன் தலை மையில் நடைபெற்றது .கூட்டத்தில் ஆணை யாளர் மல்லிகா துணைத்தலைவர் செல்வ மணி, நகராட்சி அனைத்துத்துறை அதிகாரி கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் தங்கம் ரவி கண்ணன் பேசுகையில், சொத்துவரி குறித்து மன்றத்தின் தீர்மானத்தினை அர சுக்கு அனுப்புவதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அடுத்த கூட்டம் வரு வாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் கே கே எஸ் எஸ் ஆர். ராமச்சந்திரன் முன்னிலையில் சிறப்பாக நடைபெறும். நமக்கு கிடைத் துள்ள பதவி என கருதாமல் பொறுப்பு ணர்வுடன் பொது மக்களுக்கு சேவை செய்ய கிடைத்த வாய்ப்பு என நாம் அனைவரும் நினைத்து செயல்பட வேண்டும் என்று கூறி னார்.
தொடர்ந்து கூட்டத்தில் 69 தீர்மானங் கள் வாசிக்கப்பட்டு அவை உறுப்பினர் களின் ஏகமனதான ஆதரவோடு நிறை வேறியது. நகர்மன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட் டிய பல்வேறு கேள்விகள் கோரிக்கை களுக்கு நகர்மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன் பதிலளித்து பேசும்போது, நிதி நிலைமை, ஊழியர்கள் பற்றாக்குறை ஆகி யவற்றை கவனத்தில் கொண்டு நாம் செயல் பட்டு வருகிறோம். நகராட்சி எந்த இடத்தில் தவறு நேர்ந்தாலும் நிச்சயமாக பாரபட்ச மின்றி நடவடிக்கை எடுக்கப்படும் . இதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும். நகராட்சி அலுவலர்கள் அந்தந்த பகுதியில் பணி செய்ய வார்டுகளுக்குள் செல்லும் போது அவசியம் உறுப்பினர்கள் கவனத்திற்கு தெரிவித்து இணைந்து மக்கள் பணி செய்ய வேண்டும். நகரில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. வாரம் தோறும் நகரில் குறிப்பிட்ட ஒரு வார்டை தேர்வு செய்து அங்கு முழுவீச்சில் துப்புரவு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். தொடர்ந்து அனைத்து வார்டுகளிலும் துப்புரவு பணிகள் தீவிரப்படுத்தப்படும். நகராட்சி நிர்வாகமும் பொதுமக்கள் சேவைக்கு முன்னுரிமை தந்து செயல்படும் என கூறினார் . கூட்ட முடிவில் துணைத்தலைவர் செல்வமணி நன்றி கூறினார்.