districts

img

சிபிஎம் பொன்னமராவதி ஒன்றிய செயலாளராக என்.பகுருதீன் தேர்வு

பொன்னமராவதி, அக்.20 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்னமராவதி ஒன்றிய 6-வது மாநாடு பொ னமராவதி அண்ணாமலை மண்டபத்திலுள்ள அமரர் தோழர் ராஜா நினைவு அரங்கத்தில் வி.சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம் துவக்க உரையாற்றினார். ஒன்பது பேர் கொண்ட ஒன்றிய குழு தேர்வு செய்யப் பட்டது. கட்சியின் ஒன்றிய செயளாளராக என்.பகுருதீன் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய ஒன்றிய குழு  நிர்வாகிகளை அறிமுகப்ப டுத்தி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர் நிறை வுரையாற்றினார். பொன்னமராவதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும். பாப்பாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதல் கட்டிடங்கள், கூடுதல் மருத்துவர், செவிலியர் களை நியமித்து உயர் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பொன்னமரவாதி ஒன்றியத் தில் உள்ள குடிமனை இல்லாத அனைவருக்கும் குடிமனையும், பட்டாவும் வழங்கப்பட வேண்டும். பொன்னமராவதி நகரத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;