districts

img

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கையில் 1.11 லட்சம் பேர் பங்கேற்பு

தமிழகத்தில் குரூப் - 2 மற்றும்  குரூப் - 2 ஏ பிரிவில் உள்ள 5,400 காலிப் பணியிடங்களுக்கு சுமார் 11.78 லட்  சத்திற்கும் மேற்பட்டோர் விண் ணப்பித்துள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் மே 21 சனிக்கிழமையன்று நடத்தப் பட்ட தேர்வில் தமிழகத்தில் 38 மாவட்  டங்களில் 117 மையங்களில் குரூப் - 2, 2 ஏ முதல்நிலைத் தேர்வுகள் நடை பெற்றது.  மதுரை மாவட்டத்தில் மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மேலூர், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் 189 இடங்களில் 224 தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டு, தேர்வு பணிகளுக்காக 58 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டி ருந்தது,  64,082 பேர் தேர்வு எழுத அனு மதிக்கப்பட்ட நிலையில் 55,185 மட்டுமே தேர்வை எழுதினர். 8,897 தேர்வு எழுதவில்லை என்பது குறிப்பி டத்தக்கது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உள்ள தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலை வர் மரு. எஸ். அனிஸ்சேகர் பார்வை யிட்டார்.

தேனி

தேனியில் நடைபெற்ற தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் தொகுதி-2 தேர்வை 82 மையங்க ளில் 18421 பேர் தேர்வு எழுதினர்.  சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையத்தின் மூலம் தொகுதி-2 தேர் விற்கு தேனி மாவட்டத்தில் 21,588 தேர்வாளர்கள் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்திருந்தனர். இவர் களில் 18,481 தேர்வாளர்கள் தேர்வு  எழுதினார்கள். இதில் 3,107 தேர்வா ளர்கள் தேர்வில் கலந்து கொள்ள வில்லை.   தேனி மாவட்டம், தப்புக்குண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முத்துதேவன்பட்டி இந்து நாடார் சரஸ்வதி உறவின் முறை மெட்ரிக் குலேசன் பள்ளி, தேனி மேரி மாதா மெட்ரிக்குலேசன் பள்ளி ஆகிய இடங்களில்  நடைபெற்ற மையங்களில் தேர்வாளர்களின் எண்ணிக்கை, அடிப்படை வசதி கள், பாதுகாப்பு வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிவகங்கை

 சிவகங்கை மாவட்டத்தில் 32 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுக்கு விண்ணப்பித்த 9 ஆயி ரத்து 445 தேர்வாளர்கள் அழைப் பாணை அனுப்பப்பட்டது. இதில் 8072 தேர்வாளர்கள் தேர்வில் கலந்து கொண்டனர். ஆயிரத்து 373 நபர்கள் தேர்வுக்கு வரவில்லை .சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மைய த்தை மாவட்ட ஆட்சித் தலைவர் மது சூதனன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் குரூப்-2 தேர்வு எழுத திண்டுக்கல்  மையத்திற்கு 24,972 தேர்வாளர் களும், கொடைக்கானல் மையத் திற்கு 512 தேர்வாளர்களும், பழனி மையத்திற்கு 7,667 தேர்வாளர்களும் என மொத்தம் 33,151 பேர் விண்  ணப்பித்திருந்தனர். அதில் திண்டுக்  கல் மையத்தில்  20,925 தேர்வா ளர்களும், கொடைக்கானல் மையங்களில் 411 தேர்வாளர்களும், பழனி மையத்தில் 6,724 தேர்வா ளர்களும் என மொத்தம் 28 ஆயிரம்  தேர்வாளர்கள் தேர்வு எழுதினார்கள். இன்றைய தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தில் 84.6 சதவீதம் பேர்  கலந்து கொண்டு தேர்வு எழுதினர். ஆட்சியர் விசாகன் ஆய்வு மேற் கொண்டார். 

திருவில்லிபுத்தூர் 

திருவில்லிபுத்தூரி 18 தேர்வு எழுதும் மையங்கள் அமைக்கப்பட்டு மொத்தம் 7 ஆயிரத்துக்கும் மேற் பட்ட ஆண்களும் பெண்களும் தேர்வு எழுதினர்.  தேர்வு மையங்களில் மேலிட  கண்காணிப்பாளர் பிரபு ,திருவில்லி புத்தூர் வட்டாட்சியர் ராம சுப்பிர மணியன் ஆகியோர் பார்வையிட்ட னர்.