சென்னை, ஜூன் 10- கோவை கொடிசியா மைதானத் தில் ஜூன் 14 அன்று நடைபெற இருந்த திமுக முப்பெரும் விழா, ஜூன் 15-ஆம் தேதிக்கு மாற்றப்பட் டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும், மாநில நீர்வளத் துறை அமைச்சருமான க. துரை முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக துரைமுருகன் மேலும் கூறியிருப்பதாவது: “திமுக தலைவர் மு.க. ஸ்டா லின் தலைமையில் கடந்த சனிக் கிழமை (ஜூன் 8) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மக்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, முன்னாள் முதல் வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு, நாற்பது மக்களவைத் தொகுதிகளில் வெற்றி அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, சீர்மிகு வெற்றிக்கு திமுக வை வழிநடத்திச் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவரு மான மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என ‘முப்பெரும் விழா’ ஏற்க னவே அறிவிக்கப்பட்ட ஜூன் 14-ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 15-ஆம் தேதி மாலை 4 மணிக்கு கோவை கொடிசியா மைதானத்தில் நடை பெறுகிறது. திமுக தலைவர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் நம் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், வெற்றிபெற்ற நாற்பது நாடாளு மன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள். அனைத்து மாவட் டங்களில் இருந்தும், திமுக மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய-நகர-பகுதி- பேரூர்- கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள், திமுக தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட திமுக செயலா ளர்கள் செவ்வனே மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கி றேன்” இவ்வாறு அவர் தெரிவித்தி ருக்கிறார்.