விருதுநகர் மாவட்ட நக்சல் தடுப்பு அலுவல் பிரிவு சார்பாக, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கூமாபட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வெள்ளையாபுரம் காலனி கிராமத்தில் வசிக்கும் 28 மலைவாழ் குடும்பங்களுக்கு தீபாவளியை முன்னிட்டு, அரிசி, காய்கனிகள், இனிப்பு வகைகள் மற்றும் புது துணிகள், காவல் ஆய்வாளர் ஜேசு வழங்கி விழிப்புணர்வு உரையாற்றினார். சார்பு ஆய்வாளர் அருண்குமார், மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.