ஸ்ரீவில்லிபுத்தூர், செப்.18- தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப் பட்ட சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சோமதாஸின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்திட கோரி யும், மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றி யம் வட்டார வளர்ச்சி அலுவலர் கீதா பணி யிடம் மாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் புதன்கிழமை அன்று ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், வத்திராயிருப்பு ஒன்றிய அலுவலகங்கள் முன்பு நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய அலுவலகம் முன்பு மாவட்ட துணைத் தலைவர் முரு கன் தலைமை தாங்கினார். கிளைச் செயலா ளர் தங்க முனியாண்டி, கிளை பொருளா ளர் முத்துராஜ் உள்ளிட்டோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து அலுவலக ஊழியர்களும் பங் கேற்றனர். இராஜபாளையம் ஒன்றிய அலுவலகம் முன்பு பாலகுரு தலைமையிலும், வத்திரா யிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சங்க நிர்வாகி பாலகிருஷ்ணன் தலை மையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து ஊழியர்களும் பங்கேற் றனர்.