districts

img

சாணார்பட்டி காவல்நிலையத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை

நத்தம்,ஜன.22- திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் மந்த நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி யான கமர்தீனை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காத சாணார்பட்டி காவல்துறையை கண்டித்து  மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஜனவரி 21 அன்று நடைபெற்ற போராட்டத்தில் சாணார்பட்டி ஒன்றிய தலைவர் ராஜா தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் கருப்புச்சாமி, மாவட்ட தலைவர் ஜெயந்தி, மாவட்ட செயலாளர் பகத்சிங் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மாற்றுத்திற னாளியை தாக்கியவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் அடிப்படையில் போராட்டம் கை விடப்பட்டது.