திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற நகைக்கடன் தள்ளுபடி நிகழ்வில் சின்னாளபட்டி, அம்பாத்துரை, கலிக்கம்பட்டி, சித்தையங்கோட்டை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 42 பேருக்கு கடன் தள்ளுபடி சான்றிதழை திமுக செயலாளர் ஆ.முருகேசன் வழங்கினார். நிகழ்வில் தலைவர் பிரதீபா, ஆனந்தி, கூட்டுறவு சங்க செயலாளர் அசோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.