ஒட்டன்சத்திரம், மார்ச் 6- ஒட்டன்சத்திரம் அருகே மாற்றுப்பாதை அமைக்காமல் பாலம் கட்ட சாலையில் பள்ளம் தோண்டியதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதிப்பட்டு வரு கிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மார்க்கம்பட்டி வழியாக திருப்பூர் மாவட்டம் மூலனூர், வெள்ள கோவில், தாராபுரம் ஆகிய ஊர்களுக்கு நெடுஞ்சாலை செல்கிறது. மார்க்கம்பட்டியை அடுத்து மூலனூர் செல்லும் சாலையில் புதிய பாலம் கட்டும் பணிக்காக சாலையில் பள்ளம் தோண் டப்பட்டுள்ளது. ‘பாலப் பணி நடக்கிறது மாற்றுப்பாதை யில் செல்ல வேண்டும்’ என்று தெரி விக்கும்படி இருளில் ஒளிரும் பலகையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த வழியாக செல்பவர்கள் பாலம் கட்ட தோண்டிய பள்ளத்தின் அருகே சென்று , பிறகு திரும்பி மார்க்கம்பட்டி வந்து கரூர் சாலையில் சென்று, பிறகு 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு குண்டும் குழியுமாக உள்ள சாலை வழியாக சுற்றி மூலனூர் செல்லும் சாலையில் செல்கிறார்கள். இந்த வழியாக செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் குண்டும் குழியுமாக உள்ள சாலையில் செல்லும் போது மண் தூசி பறப்பதால் மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். புதிய பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. பாலம் கட்டும் இடத்திற்கு அருகே மாற்றுப்பாதை ஏற்படுத்தி பணியை தொடங்காமல் பள்ளம் தோண்டியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டி கள் நலன் கருதி புதிய பாலம் கட்டும் இடத் திற்கு அருகே தற்காலிகமாக சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவ டிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்க ளும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.