districts

img

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் ஆந்திராவை சேர்ந்தவர்கள் அதிகம்

சபரிமலை, ஜன.11- மகரவிளக்கு நெருங்கி வருவதால், சபரி மலையில் வாகன நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒன்றாம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை ஸ்பாட் பதிவு மூலம் 21,080 பேர் சன்னிதானம் வந்தனர். தமிழகத்தில் இருந்து பக்தர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். கணிசமான அளவு கோவிட் கட்டுப்பாடு இல்லாத ஆந்திரப் பிர தேசத்தில் இருந்து ஏராளமானோர் வரு கிறார்கள். மகரவிளக்கு காலம் என்பதால் சன்னிதா னத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக் கிழமை முதல் புதிய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சன்னிதானத்தின் புதிய சிறப்பு அதிகாரியாக பி.கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திருவனந்தபுரம் போலீஸ் தலைமை யகத்தில் சிறப்பு பிரிவு எஸ்பியாக உள்ளார். மகரவிளக்கு வரவேற்பு மற்றும் திருவா பரண ஊர்வலத்துக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து துறைகளும் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளும் என சிறப்பு அதிகாரி தெரிவித்தார்.  சன்னிதானத்தில் புதிதாக பொறுப் பேற்றுள்ள குழுவில் நான்கு டி.எஸ்.பி.க்கள், 10 சி.ஐ.க்கள், 37 எஸ்.ஐ. க்கள், ஏ.எஸ்.ஐ.க்கள் மற்றும் 300 சிபிஓக்கள் உள்ளனர். சன்னிதானம் பணியில் தற்போது எட்டு டி.எஸ்.பி.,க்கள், 13 சி.ஐ.,க்கள், 58 எஸ்.ஐ.,க்கள், ஏ.எஸ்.ஐ.,க்கள், 581 சி.பி.ஓ.,க்கள் உள்ளனர்.