districts

img

கம்யூனிஸ்டுகளால் தண்ணீர் பெற்ற தேவசேரி கண்மாய்

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணையிலிருந்து ஒரு கண்மாய்க்கு தண்ணீர் கொண்டுவர 57 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட  கிராம மக்களின் விடாமுயற்சிக்கும் கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டத்திற்கும் வெற்றி கிடைத்துள்ளது.

அணை கட்டப்பட்ட கதை 1957-ஆம் ஆண்டு ஒன்றுபட்ட மதுரை மாவட்டத்தில் நிலக் கோட்டை-சோழவந்தான் இரட்டை உறுப்பினர் பொறுப்பிற்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சந்திரசேகரன், பொன்  னம்மாள் ஆகியோர் போட்டியிட்ட னர். கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நீலமேகம் போட்டியிட்டார். சந்திர சேகரன், பொன்னம்மாள் ஆகி யோர் வெற்றி பெற்று பாலமேடு பகுதிக்கு நன்றி தெரிவிக்க வந்  துள்ளனர். அவர்கள் வந்த தினத்  தன்று பாலமேட்டில் கடுமையான மழை பெய்துள்ளது. மஞ்சமலை யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளது. சந்திரசேகரனும், பொன்னம்மாளும் அங்கிருந்து வருவது பெரும்பாடகி ஆகியுள் ளது. அன்றைக்கு, “பெய்யும் மழை  நீர் வீணாகிறது. இந்த தண்ணீரை முறையாக பயன்படுத்தினால் விவ சாயம் செழிக்குமே” என்ற முடி வுக்கு வந்துள்ளனர். அன்றைக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  போட்டியிட்ட நீலமேகத்திடமும் ஆலோசனை பெற்றுள்ளனர். தொடர்ந்து இவர்களின் முயற்சி யால் 1965-ஆம் ஆண்டு கட்டப்பட் டதுதான் சாத்தியார்  அணை.  சாத்தையாறு சிறுமலை பகுதி யில் தோன்றி வைகையில் கலக்கும் துணையாறு ஆகும். 819 ச.கி.மீ  ஆற்றுப்படுகையும், 42.7989  ச.கி.மீ (4279.69 ஹெக்டேர்) பாச னப்பகுதியும் கொண்டிருந்தது. சிறுமலை, வகுத்துமலை, காட்டுநாயக்கன்ஓடை உள்பட பல இடங்களிலிருந்து வரும் நீர் சாத்தியார் அணைக்கு வருகிறது. அணையின் கொள்ளளவு 29 அடி. நீர்ப்பிடிப்புப் பகுதிகள் 450 ஹெக்டேர் அணை நீர் மூலம் எர்ரம்  பட்டி, சின்னணம்பட்டி, கோவில்  பட்டி, ஆதனூர் (கட்டிக்காரன் கண்  மாய், குறவன்குளம்), கோணப் பட்டி உட்பட 11 கண்மாய்கள் பாசன  வசதி பெறுகின்றன. பொதுப்பணித்  துறை சார்பில் அணை பராமரிக்கப்  படுகிறது.

கே.பி.ஜானகியம்மாள்

இந்த அணையிலிருந்து தேவ சேரி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள இரண்டு மூன்று கண் மதாய்க்கு தண்ணீர் கொண்டுவர வேண்டுமென்ற கோரிக்கையை முதலில் எழுப்பியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான். இதற்கான முதல் குரலை எழுப்பியவர் விடு தலைப் போராட்ட வீரரும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலை வர்களில் ஒருவருமான கே.பி.ஜானகியம்மாள் தான். அன்று தொடங்கி 2022-ஆம் ஆண்டு டிசம்பர்  பிற்பகுதி வரை இந்தப் பிரச்ச னைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து  வந்ததில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முக்கியப் பங்குண்டு.

கம்யூனிஸ்ட்டுகளின் தொடர் போராட்டம்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  சேந்தமங்கலத்திலிருந்து பால மேடு வரை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நடை பயணம் மேற்  கொண்டது. அந்த நடைபயணத் தின் பிரதான நோக்கம் சாத்தியார்  அணையை தூர்வார வேண்டும். தேவசேரி உள்ளிட்ட பல கண்மாய் களுக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும். கொய்யா, மா விவ சாயத்தை பாதுகாக்க அலங்கா நல்லூர்-பாலமேடு பகுதியை மையப்படுத்தி குளிர்சாதன வசதி யுடன் கிட்டங்கி அமைக்க வேண்  டும். கொய்யா, மா ஆகியவற்றை  மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய தொழிற்சாலை தொடங்க வேண்டு மென்பதுதான். அந்த நடைபய ணத்திற்கு தலைமை வகித்தது அன்  றைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி. ராமகிருஷ்ணன். தொடர் முயற்சி களை இன்றுவரை கட்சியின் அலங்காநல்லூர் ஒன்றியக்குழு மேற்கொண்டு வந்தது. இந்தப் பின்னணியில் , தேவ சேரி கண்மாய்க்கு தற்போது  தண்ணீர் கொண்டுவரப்பட்டுள் ளது. தேவசேரி கிராமத்திற்கு தண்  ணீர் கொண்டு வந்ததில் குறிப்பிடத்  தக்கவர்களில் ஒருவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தோழர்  ராமராஜ் (89). 120 ஏக்கரில் விளை யும் பயிர்களைக் காப்பாற்ற இவர்  57 ஆண்டுகள் போராடியிருக்கி றார்.  சாத்தியார் அணையை தூர்  வாருதல் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மதுரை மாவட்  டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய 400 கி.மீ., பயணத் தில் பங்கேற்றவர் ராமராஜ்.  தேவசேரி கண்மாய்க்கு தண்ணீர் வந்துள்ளது குறித்து அவர் கூறியதாவது: மதுரை மக்களவை உறுப்பினராக பொறுப்பு வகித்து மறைந்த தோழர் பொ.மோகனை சாத்தியார்-க்கு அழைத்து வந்து விபரத்தைக் கூறினோம். அவர் அன்றைக்கு ஆட்சியர்களாக இருந்த காமராஜ், உ.சகாயம் ஆகி யோரிடம் கோரிக்கையை கவ னப்படுத்தினார். இரு ஆட்சியர் களும் தொடர்ந்து முயற்சித்தனர். அவர்களுக்குப் பின் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. கிரா மத்தின் தேவையை வலியுறுத்தி   தண்ணீரை கொண்டுவருவதற் கான சாத்தியக்கூறுகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பிளக்ஸ் பேனர் வைக்கப் பட்டது. கோரிக்கையை பரிசீலிக்க யாரும் முன்வரவில்லை.

டைப் செய்த மனுவும், செல்போன் செய்த வேலையும்

இந்தச் சூழலில் 2022-ஆம்  ஆண்டு நவம்பர் மாதம், தேவசேரி  கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு வரவில்லை யென்றால் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என ஒரு மனுவை தயார் செய்து வைத்திருந்தோம்.  அந்த மனு சோழவந்தான் சட்ட மன்ற உறுப்பினர் வெங்கடேச னுக்கும், அமைச்சர் பி.மூர்த்திக் கம் செல்போன் மூலம் பகிரப்பட்  டுள்ளது. இதைப் பார்த்த அமைச்  சர், தண்ணீர் கொண்டு வந்துவிடு வோம் என்று உறுதியளித்தார். இந்தப் பின்னணியிலும் அலங்கா நல்லூர்-பாலமேடு சாலையில் உள்ள சுக்காம்பட்டியிலிருந்து எங்களது கண்மாய்க்கு தண்ணீர் வந்து, இப்போது மறுகால் பாய் கிறது. தேவேசேரி கண்மாய்  தண்ணீர் மறுகால் பாய்ந்து ஊர்சேரி கண்மாய்க்கு செல்கிறது. இரண்டு கிராமங்களிலும் இதன் மூலம் சுமார்  180 ஏக்கர் விளை நிலங்கள் பாசன  வசதி பெறும். இனிமேல் ஒவ்வொரு  ஆண்டும் தண்ணீர் கிடைக்கும். இது செங்கொடி இயக்கத்தின் நீண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. விவசாயிகளுக்கும் விவ சாயத் தொழிலாளர்களுக்கும் கிடைத்த வெற்றி. இவ்வாறு அவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில், அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை யை இந்தாண்டு இயக்க வேண்டும். சாத்தியார் அணையை தூர்வார  வேண்டும்.  சர்க்கரை ஆலையை  ஆய்வு செய்த குழு ஆலையை இயக்க நிதி விடுவிக்க வேண்டு மெனக் கூறியிருக்கிறது. இந்த இரண்டு கோரிக்கையையும் அமைச் சர் நிறைவேற்ற வேண்டும் என் றார். - ச.நல்லேந்திரன்