districts

ஆவினில் ஊழல்-முறைகேடு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜன.31- ஆவின் ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு பயன் 240 நாட் களை உடனடியாக அமுல்படுத்த வேண்டும். உணவு விடுதியை நிர்வாகமே ஏற்று நடத்த வேண் டும். கொரோனா கால சிறப்பு ஊதியத்தை கூட்டுறவு இணை யத்தில் வழங்கியது போல் அனைத்து ஒன்றிய ஊழியர் களுக்கும் வழங்க வேண்டும். ஆறாவது ஊதியக்குழு அனு மதித்த தர ஊதியத்தை முழுமை யாக வழங்க வேண்டும். நிரந்தர பணியான ஆவினில் ஒப்பந்த முறையைக் கைவிட வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் என்ற தீர்ப்பின்படி நிரந்தரப் பணியாள ருக்கு வழங்கும் ஊதியம் வழங்க வேண்டும். ஆவின் நிர்வாகத்தில் தொடர்ந்து நடைபெறும் ஊழல் முறைகேடுகளை தடுக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நட வடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி மதுரை ஆவின் ஊழி யர் சங்கம் (சிஐடியு )சார்பில் மதுரை ஆவின் முன்பு பி.கே.செல்வராஜ் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. எஸ்.வேல்சாமி, தமிழ்நாடு கூட்டுறவு சங்க ஊழியர் சங்க மாவட்ட  பொதுச் செயலாளர் இரா.லெனின், சிஐடியு துணைத் தலைவர் வீ.பிச்சை. மாவட்டச் செயலாளர் இரா.தெய்வராஜ், பொருளாளர் எம்.துரைசாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.