திண்டுக்கல், மே.13- மாற்றுத் திறனாளிகளுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி, ஒட்டன்சத்திரம், அம்பாத்துரை, உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறைகளை விரை வில் திறக்க வேண்டும். திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கட்டுமான வேலை களை விரைந்து முடித்து கழிப்பறை களை திறந்து விட வேண்டும். இங்கு அடிக்கடி பழுதாகும் லிப்ட்டை சரி செய்ய வேண்டும். டிக்கெட் கவுண்டரில் உரிய பணியாளர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திண்டுக்கல் ரயில் நிலையம் முன்பாக வெள்ளியன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ஜெயந்தி, மாவட்டச்செயலா ளர் பகத்சிங், நிர்வாகிகள் சசிக் குமார், ரவி, ஆறுமுகவள்ளி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பின்னர் நிலைய மேலாளரிடம் மனுக்கொடுக்கப் பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட நிலைய மேலாளர் அனைத்து கோ ரிக்கைகளையும் ஒரு மாத காலத்திற் குள் நிறைவேற்றித்தருவதாக உறுதி யளித்தார். (நநி)