தேனி, பிப்.7- ஒன்றிய பாஜக அரசின் நிதி நிலை அறிக்கையில் நூறு நாள் வேலை திட் டத்திற்கு நிதி குறைப்பு செய்த பாதக செயலை கண்டித்து தேவாரத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ராஜேந்திரன் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் எல்.ஆர்.சங்கர சுப்பு, வி.தொ.ச. நிர்வாகிகள் சி.வேலவன், ஏ. பெருமாள், எஸ்.சுருளிவேல், எஸ்.சஞ்சீவி குமார், விவசாயிகள் சங்க மாவட்ட பொரு ளாளர் சஞ்சீவ் குமார், டி.கே.சீனிவாசன், சுருளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.