தூத்துக்குடி, ஆக. 31 குஜராத் மாநிலத்தில் நடந்த பில்கீஸ் பானு பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்ற வாளிகள் 11 பேர் விடுதலை செய்யப்பட்ட தை கண்டித்து கோவில்பட்டி முகமது சாலி யாபுரத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநி லத்தில் காவி பயங்கரவாதிகளால் திட்ட மிட்டு இனப்படுகொலை மற்றும் கோத்ரா ரயில் எரிப்பு கலவரம் நடந்தது. இந்த கலவரத்தின் போது நிறைமாத கர்ப்பிணி யான இஸ்லாமிய சகோதரி பில்கிஸ் பானு 11 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப் பட்டார்.மேலும் அவரது இரண்டு வயது மகள், உறவினர்கள் உட்பட பலர் கொடூர மாக கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக 11 பேர் குற்றம் சாட்டப் பட்டு கைது செய்யப்பட்டனர்.குற்றவாளி களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நிலையில் பின்பு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 18 தேதி உச்சநீதிமன்றத்தில் நடந்த விசார ணையில் குற்றவாளிகள் அனைவரும் நிரப ராதிகள் என்று தீர்ப்பு கூறி விடுதலை செய் யப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், குற்றவாளி கள் அனைவரும் உடனடியாக கைது செய் யப்பட வேண்டும் என வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க கிளை தலைவர் மும்தாஜ் தலைமை தாங்கி னார். மாநில குழு உறுப்பினர் விஜயலட்சுமி மற்றும் வாலிபர் சங்க மாவட்ட தலைவர் தினேஷ் குமார் ஆகியோர் உரையாற்றி னர். நிறைவாக மாதர் சங்க மாவட்ட செயலா ளர் பூமயில் உரையாற்றினார்.ஆர்ப் பாட்டத்தில் மாதர் சங்க நகரச் செயலாளர் மாரியம்மாள் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர் ஜானகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.