districts

img

நெல்லை கொள்முதல் செய்யக் கோரி விவசாயிகள் மறியல்

வத்திராயிருப்பு, ஜன.30- நெல்லை கொள்முதல் செய்ய அதிகாரிகள் கால தாம தம் செய்வதால் கோபமடைந்த விவசாயிகள் கான்சாபுரம் பகுதி யில் டிராக்டரை சாலையில் நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் வத்தி ராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மகாராஜபுரம், தம்பி பட்டி, கான்சாபுரம்,  கூமாப்பட்டி, கோட்டையூர், உள்ளிட்ட பகுதி களில் பிரதானமாக நெல் விவ சாயமே நடைபெற்று வருகிறது. தற்போது இப்பகுதியில் சுமார் 7,400 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய் யப்பட்ட நெல் தற்போது அரசு கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யப்பட்டு வரு கிறது.  இந்நிலையில் வத்திராயி ருப்பு அருகே உள்ள கான்சா புரம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்யா மல் கால தாமதம் செய்வதால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக 50 டன்னுக்கு மேலாக நெல் குவிந்து கிடக்கிறது.இதனால் கோபமடைந்த விவசாயிகள் கான்சாபுரம்- அத்திக் கோயில் சாலையில் டிராக்டரை சாலை யில் நிறுத்தி  விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.  மேலும் கூடுதலாக நெல் தூற்றும் இயந்திரம் அமைத்து தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். பின்னர் தகவல் அறிந்து கூமாப்பட்டி காவல் துறையினர் மறியலில் ஈடு பட்ட விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தை கை விட்டு விவ சாயிகள் கலைந்து சென்றனர்.