districts

img

ஓட்டுநர்கள் நல வாரியத்தை முறைப்படுத்திடுக!

தென்காசி ,ஆக. 18- தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலா ளர் சங்க தென்காசி மாவட்ட அமைப்பு சிறப்பு பேரவை கூட்டம் சங்கரன் கோவிலில்  நடைபெற்றது. சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் ராஜூ தலைமை தாங்கினார் மாநிலத் துணைத் தலை வர்கள் மரிய ஜான் ரோஸ் திருமலை முன்னிலை வகித்தனர்.  பேரவையை துவக்கி வைத்து தமிழ்நாடு சாலை போக்குவரத்து சங்க மாநில குழு உறுப்பினர் கே. கண்ணன் பேசினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.மணிகண்டன், பொருளாளர் கே.தர்மராஜ்,  தமிழ்நாடு சாலை போக்குவரத்து சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ். மூர்த்தி  ஆகியோர் பேசி னர்.  தலைவராக வன்னிய பெருமாள்,செயலாளராக தர்மராஜ், பொருளாளராக ராஜு தேர்வு செய்யப்பட்ட னர். பேரவையில் ஓட்டு நர்கள் நல வாரியத்தை முறைப்படுத்தி ஓட்டுநர்க ளுக்கான கிட் வழங்கிட வேண்டும், மேக்ஸி கேப் வாகனங்களுக்கு இருக்கை யின் அடிப்படையில் (18+1) அனுமதி வழங்கிட வேண்டும்,  கேரள அரசு போல ஆன்லைன் முறையை தமிழகத்திலும் அமல்படுத்திட வேண்டும், வாகனங்கள் நிறுத்துவ தற்கான இடவசதியை நகர நிர்வாகம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;