districts

img

திண்டுக்கல் ஆட்சியரகம் முன்பு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்,ஜன.21-   திண்டுக்கல் அருகே உள்ள செட்டிநாயக்கன்பட்டி பஞ்சா யத்தில்  இபி காலனி, கள்ளிப் பட்டி, அறிவுத் திருக்கோவில், எம்.வி.எம். நகர் விஸ்தரிப்பு, ராம்ஜி நகர், சத்யா நகர், ராஜக்காபட்டி, காந்திநகர் ஆகிய பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிகளில் குடி நீர் வசதி, சாலை வசதி , கழிவு நீர் ஓடை வசதி, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இது குறித்து பஞ்சாயத்து அலுவல கத்தில் பலமுறை அப்பகுதி மக்கள் மனு கொடுத்தும் இது வரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதனை கண்டித்தும் அடிப்படை வசதிகள்  கோரியும்  திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த  ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய கவுன்சி லர் செல்வநாயகம் தலைமை தாங்கினார். சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் தா.அஜாய்கோஷ், ஒன்றிய செயலாளர் சரத்குமார் முன்னாள் ஊராட்சின்ற தலை வர் செல்வ கணேசன் , முன்னாள் மாவட்ட செயலாளர் பி கே கருப்பு சாமி ஆகியோர்   பேசினர்.ரேணுகா நன்றி கூறினார்.