திண்டுக்கல், மார்ச் 10- திண்டுக்கல் மாவட்டம் வேட சந்தூர் அய்யனார் நகரில் 100 குறவர் சமூக மக்கள் வசிக் கின்றனர். 50 ஆண்டுகளாக வசித்து வரும் இவர்கள் வீடு களுக்கு பட்டா இல்லை. இதனையடுத்து சிபிஎம் தலை மையில் வேடசந்தூர் வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.முத்துச்சாமி, ஒன்றியச் செயலாளர் பெரிய சாமி, மாவட்டக் குழு உறுப்பி னர் கிருஷ்ணமூர்த்தி, கிளைச் செயலாளர் தங்கராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். 150 பெண்கள் இப்போராட் டத்தில் பங்கேற்றனர். இதனை யடுத்து வட்டாட்சியர் மணி மொழி விசாரணை செய்து பட்டா தருவதாக உறுதியளித்தார்.