districts

img

சிபிஎம் சிவகங்கை மாவட்ட மாநாடு மடப்புரத்தில் துவங்கியது

சிவகங்கை, டிச.29- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட 23 ஆவது மாநாடு டிசம்பர் 29 புதனன்று திருப்புவனம் அருகே மடப்புரத்தில் தோழர்கள் கே.பி. நூர்முகமது, ஏ.ஆர்.கமலம்மா நினைவரங்கில் (அம்மாள் மண்டபம்) துவங்கியது. மாநாட்டு கொடிக்கம்பத்தை மானாமதுரை பழைய பேருந்து நிலை யத்திலிருந்து ஒன்றிய செயலாளர் ஆண்டி தலைமையில் மூத்த தோழர் ஜே.ராமச்சந்திரன் எடுத்துக்கொடுக்க மாநாட்டு அரங்கில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் முத்துராமலிங்க பூபதி பெற்றுக் கொண்டார். திருப்பத் தூரிலிருந்து மூத்த தோழர் நூர் முகம் மது அவர்களின் நினைவு கொடியை மாவட்டக்குழு உறுப்பினர் முருகேசன் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன் எடுத்துக் கொடுக்க மாவட்ட செயற்குழு உறுப்பி னர் திருநாவுக்கரசு பெற்றுக் கொண் டார். கண்டரமாணிக்கத்திலிருநது மூத்த தோழர் ஏ.ஆர்.கமலம்மாள் நினைவு ஜோதியை திருப்பத்தூர் ஒன்றிய செய லாளர் ஆறுமுகம் தலைமையில் மாவட்டக்குழு உறுப்பினர் வேணு கோபால் எடுத்துக்கொடுக்க மாவட்ட குழு உறுப்பினர் காந்திமதி பெற்றுக் கொண்டார்.

வேளாரேந்தலில் மூத்த தோழர் முனியாண்டி நினைவு ஜோதி யை காளையார்கோவில் ஒன்றியச் செயலாளர் தென்னரசு தலைமையில் மாவட்டக்குழு உறுப்பினர் அழகர் சாமி எடுத்துக்கொடுக்க மாவட்டக் குழு உறுப்பினர் மணியம்மா பெற் றுக்கொண்டார். காரைக்குடியிலி ருந்து பாக்கியராஜ் நினைவு ஜோதி யை தாலுகா செயலாளர் அழகர்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்பு சாமி எடுத்து கொடுக்க பன்னீர்செல் வம் பெற்றுக் கொண்டார். மணலூரிலி ருந்து தோழர் சாகுல் ஹமீது நினைவு பயணமும்,பூவந்தியிலிருந்து தோழர் ஆல்பாடி, தோழர் மார்நாடு நினைவு ஜோதி பயணமும் மாநாட்டு அரங் கில் கொண்டுவரப்பட்டது. செந் தொண்டர்கள் அணிவகுப்பு நடத்தி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப் பட்டது. மாநாட்டில் கட்சிக் கொடியை மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.கே. மாணிக்கம் ஏற்றி வைத்தார். மாநாட் டிற்கு முத்துராமலிங்க பூபதி, காந்தி மதி, சுரேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப் பினர் தண்டியப்பன் அஞ்சலி தீர்மா னம் வாசித்தார். மாநாட்டு வரவேற் புக்குழு செயலாளர் அய்யம்பாண்டி வரவேற்று பேசினார். மாநாட்டை தொடங்கி வைத்து மாநில செயற் குழு உறுப்பினர் மதுக்கூர் ராம லிங்கம் பேசினார். மாவட்டச் செயலா ளர் வீரபாண்டி வேலை அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்புசாமி நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தார்.