திருச்சிராப்பள்ளி, பிப்.27- வளர்ச்சிக்கு உதவாத, வறுமை யை ஒழிக்காத ஒன்றிய அரசின் மக் கள் விரோத பட்ஜெட் மற்றும் மாமேதை காரல் மார்க்ஸ் குறித்து அவதூறாக பேசிய தமிழ்நாடு ஆளு நர் ஆர்.என்.ரவியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மலைக்கோட்டை பகுதிக் குழு சார்பில் திங்களன்று தாரா நல்லூர் கீரைக்கடை பகுதியில் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மலைக் கோட்டை பகுதி செயலாளர் பா. லெனின் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜன், மணிகண்டன் ஆகி யோர் விளக்கிப் பேசினர். ரமேஷ், மணிகண்டன், முருகன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம் திருக் கடையூரில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு கட்சியின் மாவட்டக்கழு உறுப்பினர் காபிரியேல் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் ஏ. ரவிச்சந்திரன் மற்றும் மாவட்டக் குழு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக கட்சி அலுவலகத்திலிருந்து கண் டன முழக்கமிட்டு நூற்றுக்கணக்கா னோர் பேரணியாக வந்து ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை கிட்டப்பா அங் காடி அருகில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு ஒன்றியச் செயலா ளர் டி.ஜி.ரவி, நகர பொறுப்பு செய லாளர் ஏ.ஆர்.விஜய் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ். துரைராஜ் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட னர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டம் சேது பாவாசத்திரம் ஒன்றியம் ரெட்ட வயல் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மூத்த தோழர் வீ.கருப்பையா தலைமை வகித் தார். மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் ஆர்.மனோகரன் மற்றும் ஒன்றி யக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி அம்மா உணவகம் அரு கில் ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சிபிஎம் தாலுகா செய லாளர் தென்றல் கருப்பையா தலை மை வகித்தார். மாவட்டச் செயலா ளர் எஸ்.கவிவர்மன், மாவட்டக் குழு உறுப்பினர். தங்கராஜ், சிஐ டியு மாவட்டச் செயலாளர் கர்ணா, தீண்டாமை ஒழிப்பு முன்ணனி மாவட்ட துணைத்தலைவர் கவி பாலா, மாதர் சங்க ஒன்றிய செய லாளர் இந்திராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.