districts

img

நெல்லையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, ஆக.7- தமிழக அரசு மின் கட்  டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி தாழையூத்து மின்சார அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மானூர் தாலுகா குழு  உறுப்பினர் எஸ்.சின்னத்  துரை தலைமை தாங்கினார். கட்சியின் மானூர் தாலுகா  செயலாளர் எம்.சுடலைராஜ்,  தாலுகா குழு உறுப்பினர்கள் ஆர்.சக்திவேல், டி.செல்லத் துரை, கிளைச் செயலாளர் கே.சுடலைமுத்துமற்றும் ஏ.நாகராஜன், மாரியப்பன்  ஆகியோர் பேசினர். திரளான தோழர்கள் பங்கேற்றனர்.

;