மதுரை, செப்.6- ஒன்றிய பாஜக அரசின் மக்கள், தொழிலாளர்-விவசாயிகள் விரோத நடவடிக்கைகளை கண் டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செப்டம்பர் 7 அன்று தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல், ஒன்றிய அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடைபெற உள்ளது. இதனொரு பகுதியாக, மறி யலை விளக்கி மாநிலம் முழுவதும் பிரச்சாரம் இயக்கங்கள் கட்சி கிளை கள் சார்பில் நடைபெற்று வருகிறது. இதன்படி, மதுரை மாநகர் வடக்கு - 2ஆம் பகுதிக் குழு சார்பில் கிருஷ்ணாபுரம் காலனி, அந்த னேரி, மீனாம்பாள்புரம் ஆகிய பகு திகளில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. இதில், கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் மக்களை சந்தித்து மறியல் விளக்க பிரசுரத்தை வழங்கி னார். பகுதிக் குழு செயலாளர் ஏ. பாலு, மாவட்டக் குழு உறுப்பினர் கே.அலாவுதீன், மாதர் சங்க மாவட் டத் தலைவர் ஆர்.லதா உள்ளிட் டோர் பங்கேற்றனர். மேற்கு - 1 ஆம் பகுதிக் குழு சார்பில் ஜெய்ஹிந்துபுரம் பகுதி யில் நடைபெற்ற பிரச்சாரத்தில், மாவட்டச் செயலாளர் மா.கணே சன், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் ம.பாலசுப்பிரமணியம், துணை மேயர் தி.நாகராஜன், பகுதிக் குழு செயலாளர் ஏ.எஸ்.செந்தில்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். வடக்கு - 1 ஆம் பகுதிக் குழு சார் பில் அண்ணாநகர் சுகுணா ஸ்டோர் பகுதியில் நடைபெற்ற இயக்கத் தில், மாநிலச் செயற்குழு உறுப்பி னர் எஸ்.கண்ணன், பகுதிக் குழு செயலாளர் வி.கோட்டைச்சாமி, மாமன்ற உறுப்பினர் டி.குமரவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர். சிவகங்கை தேவகோட்டையில் நடை பெற்ற பிரச்சாரத்திற்கு தாலுகா செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். பொறுப்பு மாவட்டச் செயலாளர் கருப்புச்சாமி, மாவட் டக் குழு உறுப்பினர் பொன்னுச்சாமி, தாலுகா குழு உறுப்பினர் அஜீஸ் கான் உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல், சிவகங்கை அம் பேத்கர் சிலை, காரைக்குடி அரி யக்குடி, சிவகங்கை சுண்ணாம்பு காளவாசல், கல்லல், மானா மதுரை ஆகிய பகுதிகளில் பிரச்சா ரம் நடைபெற்றது.